Villupuram

News October 25, 2024

பள்ளி மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை

image

விழுப்புரம் மாவட்டம் ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த தனுஸ்ரீ (14), பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News October 25, 2024

தரமற்ற விதைகளை விதைக்க கூடாது: ஆய்வு இயக்குநர்

image

விழுப்புரம் கோலியனூர் பகுதியில் உள்ள விதை விற்பனை நிலையங்களில், விதை ஆய்வு துணை இயக்குனர் சரவணன் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் பேசிய அவர், “விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடப்பு பருவத்துக்கேற்ற தரமான உளுந்து விதைகளைத் தேர்ந்தெடுத்து, விதைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் உரிய ஆவணமின்றி விற்கப்படும் உளுந்து விதைகளை விதைப்புக்கு பயன்படுத்தக் கூடாது” எனத் தெரிவித்தார்.

News October 25, 2024

த.வெ.க. மாநாட்டில் பட்டாசு வெடிக்க தடை

image

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பட்டாசு வெடிக்க தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தொண்டர்களுக்கு பட்டாசு வெடிக்க கூடாது என தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

News October 25, 2024

அரசுக்கு ரூ.1.14 கோடி இழப்பு ஏற்படும்: ராமதாஸ்

image

வானூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, 600 மகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.1.14 கோடி இழப்பு ஏற்படும். எனவே, பேருந்து கட்டணம் உயர வாய்ப்புள்ளது” என்றார்.

News October 25, 2024

சாலையை கடக்க முயன்ற முதியவர் பலி

image

விழுப்புரம், கொண்டங்கி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன் (81). இவர், நேற்று காணை அருகே உள்ள தொகைபாடி பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்து இவர் மீது மோதியது. இதில், கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

News October 25, 2024

த.வெ.க. தொண்டர்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை

image

த.வெ.க. மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் வாகனங்களின் மேல் அமர்ந்து கொடி பிடித்து செல்லக்கூடாது என மின்வாரிய தலைமை பொறியாளர் மணிமேகலை எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மாநாட்டிற்கு மின்வாரியத்தில் இருந்து மின்சாரம் பெறவில்லை. மாநாடு முழுவதும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பயன்படுத்துகின்றனர். மின்வாரியத்திற்கு பணம் செலுத்தியதால் மாநாட்டு தளத்தில் இருக்கும் மின்கம்பிகள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளன.

News October 25, 2024

முதலமைச்சர் கோப்பை: 26ஆவது இடத்தில் விழுப்புரம்

image

‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2024’ நிறைவு நாளான நேற்று (அக்.24) பதக்கம் பெற்றவர்களின் விபரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், விழுப்புரம் மாவட்டம் 2 தங்கம், 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் 26ஆவது இடத்தில் உள்ளது. சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலம் என மொத்தம் 254 பதக்கங்களுடன் சென்னை மாவட்டம் சாம்பியனானது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க

News October 25, 2024

த.வெ.க. மாநாடு: பாதுகாப்புப் பணியில் 6,000 போலீசார்

image

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை மறுநாள் (அக்.27) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டை பாதுகாப்பாக நடத்தி முடிக்க, சுமார் 6,000 போலீசார் ஈடுபட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாநாட்டுப் பகுதியில் நேற்று இரவு பெரியார், காமராஜர், பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் கட்-அவுட்டுகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது.

News October 25, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

விழுப்புரம் மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர், காவல்துறை அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோர் கூட்டாக பார்வையிட்டு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து உடனடியாக சரிசெய்ய வேண்டும். அனைத்து சாலைகளிலும் Speed Breaker தொலைவில் இருந்தே தெரியும் வகையில் தெர்மோபிளாஸ்ட் பெயிண்டால் கோடுகள் வரைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

News October 25, 2024

விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர்

image

செஞ்சி வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் “உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு” திட்டத்தின் கீழ் (ஊட்டமிகு சிறுதானியங்கள்) விழிப்புணர்வு வாகனத்தை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் R.விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி தலைவர் KSM மொக்தியார் அலி மஸ்தான், வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!