India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் இன்று( டிச7 ) காலை 10மணிக்கு அரசும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் திறனறிதல் தேர்வை நடத்தி வருகிறது. 26 -வது ஆண்டாக நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு துளிர் திறனாளிகள் தேர்வு 9 மையங்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் அமுதா தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (டிசம்பர் 07.12.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
ஈஷா கிராமோத்வசம்’ திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான வாலிபால், த்ரோபால், விளையாட்டு போட்டிகள் வேலூர், நேதாஜி மைதானத்தில் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் விளையாட்டு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நமது கிராமத்து இளைஞர்கள் உற்சாகபடுத்த நடிகர் ஈரோடு மகேஷ் வருகிறார்.
காய்கறி (கிலோவில்) தக்காளி ரூ.45-48, வெண்டை ரூ.40, கத்தரிக்காய் ரூ.30-45, புடலை ரூ.35, பீர்க்கன் ரூ.40-55, சுரைக்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.50, கறிவேப்பிலை ரூ.90, கொத்தமல்லி ரூ.50, கேரட் ரூ.40-60, பீன்ஸ் ரூ.40-45, காலிபிளவர் ரூ.20-25, முள்ளங்கி ரூ.35, பெரிய வெங்காயம் ரூ.56-58, சின்ன வெங்காயம் ரூ.55-60, இஞ்சி ரூ.50, தேங்காய் ரூ.25-30-35, அவரை ரூ.35 விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அவரது உறவினர்களிடம் செல்போனில் வீடியோ காலில் சந்தித்து பேசும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கம்யூட்டர் மூலம் கைதிகள் குடும்பத்தினரை தெளிவாக பார்த்து பேசும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய சிறையில் 10 பெண்கள், தனிச்சிறையில் 2 கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் விழாவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 4,844 பயனாளிகளுக்கு 129 கோடியில் அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து 247 பஞ்சாயத்துகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு 345 கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்குகிறார். இதையடுத்து திமுக மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளை சந்திக்கிறார் என கட்சியினர் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்த கள ஆய்வு கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (டிசம்பர் 6) நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர். காந்தி, மாவட்ட ஆட்சியர்கள் சுப்புலட்சுமி, சந்திரகலா, எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் 715 பயனாளிகளுக்கு 6.59 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக நீர் வனத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி, எம்பி கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன் மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தின்கீழ் விளையாட்டு உபகரணங்களை வழங்க உள்ளார். பின்னர் 12 மணிக்கு வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியிலுள்ள சாந்தி மஹாலில் வேலூர் மாவட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகளை சந்திக்கிறார்.
வேலூருக்கு வருகை தரும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக நலத்திட்ட உதவிகளை இன்று வழங்குகிறார். பின்னர் நாளை நறுவி மருத்துவமனையில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மேலும் விஐடி அருகே உள்ள மைதானத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய பின்னர் கழக சார்பு அணி நிர்வாகிகளை சந்திக்கிறார்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.