India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் (scrap) உடைக்க தகுதியுள்ள நிலையில் உள்ளது. இவை வரும் டிசம்பர் 20-ம் தேதி வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் இன்று (டிசம்பர் 16) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (டிச.16) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 471 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில் குமரன், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன். மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (டிசம்பர் 15 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 172 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோர்ட்டில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதற்கு குடியாத்தம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், குடியாத்தம் சார்பு நீதிபதியுமான பிரபு தலைமை தாங்கினார். இதில் ஏராளமான வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு வக்கீல் லோகநாதன், வக்கீல்கள் ஜெகதீசன், ரஞ்சித்குமார் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை(டிச 15) தொடங்கி வரும் ஜனவரி-5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே உரிமையாளர்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்று குட்டிகள் ஆகியவற்றுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டு கொள்ள வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று டிசம்பர் 14 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
காட்பாடி அடுத்த அம்முண்டி ஊராட்சியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவையை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி இன்று (டிசம்பர் 14) தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ப. கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை பதிவாளர் நர்மதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகமானது பழைய கட்டிடம் ஒன்றில் இயங்கி வருகிறது. இதையடுத்து அருங்காட்சியத்தை புதுப்பிக்க ரூ. 96 லட்சத்து 88 ஆயிரம் ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம் அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது இதுவரை 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது என தெரிவித்தனர்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம், அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.