Vellore

News April 23, 2025

குழந்தை பாக்கியம் அருளும் ஜலகண்ட ஈஸ்வரி அம்மன்

image

வேலூர், மேல்வல்லத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ஜலகண்ட ஈஸ்வரி அம்மன் ஆலயம். இலகிய மலையின் மேல் அமைந்துள்ள அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் சிவபெருமான் கால்பதித்து லிங்கமாகக் காட்சி அருள்பாலிக்கிறார். திருமணமாகி வெகு நாள்களாகியும் குழந்தை இல்லாமல் ஏங்கும் பெண்கள் இத்திருத்தலத்திற்கு வந்து அம்மனை மனமுருக வேண்டித் தொட்டில் கட்டி வழிபட சில மாதங்களிலேயே குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

’தமிழில் பெயர்ப் பலகை இல்லையென்றால் சிறை’

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்க மே 15 வரை மட்டுமே அவகாசம். இல்லையென்றால் நிறுவனங்களுக்கு ரூ.2,000 அபராதமும், தொழிற்சாலைகளுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். எனவே அணைத்து கல்வி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள்சங்கங்கள் தமிழ் பெயா் பலகை நூறு சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்து அபராதத்தை தவிா்க்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

வேலூர் மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’<> இணையதளத்தில்<<>> புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

அங்கன்வாடி பணியிடங்கள்; இன்றே கடைசி

image

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 207 அங்கன்வாடி பணியாளர், 6 குறு அங்கன்வாடி பணியாளர், 163 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. <>இந்த விண்ணப்பங்களை<<>> இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் என்பதால் மறக்காம ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

பேர்ணாம்பட்டு அருகே அண்ணனை கத்தியால் குத்திய தம்பி

image

பேரணாம்பட்டு கோட்டச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் திவித் (23). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இவரது தம்பி சிபிராஜ் (21). திவித்திற்கு குழந்தைகள் இல்லாதது குறித்து அண்ணன், தம்பி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிபிராஜ் தனது அண்ணன் திவித்தை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 23, 2025

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல்.22) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News April 22, 2025

காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

image

வேலூர் அடுத்த தெள்ளூர் கிராமத்தை சேர்ந்த ஷாம்நாத் (24), லேப் டெக்னிஷியன். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. காதலர்களிடையே ஏற்பட்ட தகராறில் அந்த பெண், இவரை விட்டு விலகி சென்றுள்ளார். காதல் தோல்வியால் விரக்தியடைந்த ஷாம்நாத், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் அரியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 22, 2025

17 வயது சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது பாய்ந்த போக்சோ

image

காட்பாடியை சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது, சிறுமியின் உறவினரான சீமான் (30) என்பவருடன் திருமணம் நடந்தது தெரியவந்தது. புகார் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 22, 2025

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு

image

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 30 வயதிற்குட்பட்ட டிப்ளமா, எலக்ட்ரானிக், கம்யூனிகேஷன், இன்ஜினீயரிங் அல்லது பயோ மெடிக்கல் இஞ்ஜினியரிங் படித்த இளைஞர்கள் clin.cmcvellore.ac.in என்ற இணையதள லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 30ஆம் தேதி ஆகும். ஷேர் செய்யங்கள்

News April 22, 2025

கோடைகால பயிற்சி முகாம்: கலெக்டர்

image

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், வரும் ஏப்ரல் 25 முதல் மே 15ஆம் தேதி வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் 25ஆம் தேதி காலை 6 மணியளவில் நேரிலோ அல்லது 7401703483 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!