Vellore

News January 3, 2025

‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் வந்தால் என்னென்ன நடக்கும்

image

14 நாட்களில் காய்ச்சல், நடுக்கம், உடல் சோர்வு, உடல் வழி, இரும்பல் போன்றவை ஏற்படும். 2ஆவது வாரத்தில் நுரையீரல் தொற்று, நிமோனியா மற்றும் முளைக்கு தொற்று பரவி சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழந்து, மரணமடையும் வாய்ப்பு 30% வரை உள்ளது. இது பிரச்னைக்குரிய காய்ச்சல் என்பதை மக்கள் உணர வேண்டும். ஷேர் பண்ணுங்க.

News January 3, 2025

வேலூரிலும் ஸ்கரப் டைப்ரஸ் பாக்டீரியா தொற்று

image

தமிழகத்தில் ‘ஸ்கரப் டைப்ரஸ்’ என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருகிறது. திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயப் பகுதிகள், வன பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு Azithromycin, Doxycycline போன்ற மாத்திரைகளை பயன் படுத்தலாம். இருப்பினும், மருத்துவர்களை அணுகுவது நல்லது.

News January 2, 2025

கலெக்டர் சுப்புலட்சுமி  தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு பயிற்சியினை வழங்கவுள்ளது. எனவே www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 2) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News January 2, 2025

அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு

image

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த டிச.9ஆம் தேதி துவங்கி டிச.23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து 24ஆம் தேதி முதல் ஜன.1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், வேப்ங்கனேரியில் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதில், மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்றனர்.

News January 2, 2025

அரசுக்கு எதிராக கருத்து : காவலர் சஸ்பெண்ட்

image

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தமிழக அரசுக்கு எதிராக FACE BOOK-ல் கருத்து தெரிவித்த வேலூர் கிராமிய காவல் நிலைய முதல் நிலை காவலர் அன்பரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாவட்ட எஸ்.பி. மதிவாணன் செய்திக்குறிப்பில், அரசுக்கு எதிராக காவலர் அன்பரசன் கருத்து பதிவு செய்துள்ளார். இது சீருடை பணி விதிகளுக்கு எதிரானது. அவர் கருத்து பதிவிட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது எனத் தெரிவித்தார்.

News January 1, 2025

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜன. 01) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.

News January 1, 2025

டாஸ்மாக் கடைகளில் 4.75 கோடிக்கு மது விற்பனை

image

வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 105 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் சாதாரண நாட்களில் ரூபாய் 3 கோடி வரை விற்பனை நடப்பது வழக்கம். ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று ஒரேநாளில் ரூபாய் 4.75 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆங்கில புத்தாண்டை விட இந்த ஆண்டு விற்பனை குறைவு என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 31, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (டிசம்பர் 31.12.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News December 31, 2024

காட்பாடி அருகே வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

image

காட்பாடி தாலுகா கழிஞ்சூர் ஓடையில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கு போட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக விருதம்பட்டு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 31, 2024

அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட காவலர் சஸ்பெண்ட்

image

வேலூர் தாலுக்கா காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த அன்பரசன் தனது முகநூல் பக்கத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக வெளியான பதிவுக்கு ஆதரவாக தனது கருத்து பதிவு செய்துள்ளார். இது குறித்து மாவட்ட காவல் அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அன்பரசனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!