India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜனவரி 4) நடத்திய சோதனையில் 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜன. 04) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.
வேலூர் மாவட்டத்தில் 4,51,410 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களில், இதுவரை 2,33,783 அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வரும் 9ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எந்த சிரமமின்றி பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
2025-2026 ஆம் கல்வி ஆண்டில் புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி போட்டியை இன்று காலை 6 மணியளவில் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் சிருஷ்டி பள்ளி நுழைவாயிலில் கலெக்டர் சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க இன்று (ஜனவரி 3) மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 45 மது பாட்டில்கள், 2 லிட்டர் கள்ளச்சாராயம், 150 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட எஸ்பி மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் திருநங்கையருக்கான முன்மாதிரி விருதை, திருநங்கையர் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ம் தேதியன்று ஒரு லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்று பெறுவதற்கு http://awards.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 3) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல்நிலைய இன்ஸ்பெக்டராக ஆனந்தன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் போலீஸ் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்து இன்று வடக்கு மண்டல ஐஜி உத்தரவிட்டார். அதேபோல் வேலூர் எஸ்.பி தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த 5 பேர் வெவ்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காட்பாடியில் எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். சுமார் 7 மணி நேரம் வீட்டின் வெளியே அமலாக்க துறையினர் காத்திருந்த நிலையில், தற்போது சோதனையை தொடங்கியுள்ளனர். கதிர் ஆனந்த் வீட்டில் இல்லாததால் அவரின் அனுமதிக்காக காத்திருந்தனர். திமுகவினர் ED-ஐ சோதனையிட்ட பிறகே வீட்டிற்குள் அனுமதித்தனர்.
▶உண்ணிகளிடமிருந்து கடிபடாமல் இருப்பதுதான் முதல் தற்காப்பு. ▶தலையணை, படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். ▶வீட்டை சுற்றி புதார்கள் மண்டி இருந்தால், அதனை சுத்தம் செய்ய வேண்டும். ▶உண்ணிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம். ▶மலையேற்றத்துக்கு செல்லும்போது கொசு விரட்டி, உண்ணி விரட்டிகளை தேய்த்து கொள்ளுங்கள். ▶காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க…
Sorry, no posts matched your criteria.