India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் காசநோய் கண்டறியும் முகாம் இன்று (ஜனவரி 8) நடந்தது. இந்த முகாமை சிறை கண்காணிப்பாளர் தர்மராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட காச நோய் துணை இயக்குனர் ஜெயஸ்ரீ, சிறை மருத்துவர் டாக்டர் பிரகாஷ் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கு காசநோய் கண்டறியும் பரிசோதனைகள் செய்தனர்.
சோளிங்கர் டவுன் வாலாஜா ரோட்டில் ரமேஷ் (வயது 52) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் மது அருந்த அனுமதி வழங்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடையில் போலீசார் சோதனை நடத்தி மது விற்பனை செய்ததை உறுதி செய்தனர். அதைததொடர்ந்து ரமேஷை கைது செய்தனர். மேலும் தாசில்தார் செல்வி, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.
கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (56) இவர் பஸ் நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்ற பைக் ரமேஷ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் 35% அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும்.
தாட்கோ இணையதள முகவரியில் (http://newscheme.tahdco.com) விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் ஜன 21, 22 ஆம் தேதி அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளன. போட்டிகளில் பங்கேற்பு உள்ள மாணவர்கள் அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று செய்தி குறிப்பு தெரிவித்துள்ளார்
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜனவரி 7) நடத்திய சோதனையில் 4 கிலோ கஞ்சா, 3 கிலோ குட்கா பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம், பசுமாத்தூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளியில் தூய்மையாக வைத்திருக்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து 10ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு புத்தகம் வழங்கி பாராட்டினார்.
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், எஸ்பி மதிவாணன் பேசும் போது, சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தலை தடுக்க சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் கலைஞர் கைவினை திட்டத்தின்கீழ் கடனுதவி பெற தகுதியுடைய கைவினைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். கலை, கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை பிணைமில்லாமல் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 0416-2242512, 2242413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜனவரி 06.01.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.