Vellore

News January 12, 2025

வேலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு /

image

வங்க கடலில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் இன்று முதல் ஜன.16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

News January 11, 2025

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜன., 11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.

News January 11, 2025

வேலூர் மாவட்ட காவல்துறை வேண்டுகோள்

image

வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக தங்களுடைய வீட்டின் முகவரியையும், பயண விபரத்தையும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்லுமாறு வேலூர் மாவட்ட காவல்துறை தனது X வலைத்தளப் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளது.

News January 11, 2025

கலெக்டர் தலைமையில் மருத்துவர்களுடன் ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள், Scan centre உரிமையாளர்களுக்கான கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய நோயறிதல் நுட்பங்கள் சட்டம் தற்போது பரவி வரும் காய்ச்சல் குறைப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (11.01.2025) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

News January 11, 2025

வேலூர் மாவட்டத்தில் 336 மதுபாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் மதுபாட்டில்களை கடத்துபவர், விற்பவர்களை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஜனவரி 10) நடத்திய சோதனையில் 336 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News January 11, 2025

வேலூர் மாவட்டத்தில் 336 மதுபாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் மதுபாட்டில்களை கடத்துபவர், விற்பவர்களை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜனவரி 10) நடத்திய சோதனையில் 336 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட வேலூரில் இருந்து சென்னை கோயம்பேட்டுக்கு 60 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு 15 பஸ்கள், ஒசூரில் இருந்து கோயம்பேட்டுக்கு 15 பஸ்கள், வேலூரில் இருந்து பெங்களூருக்கு 8 பஸ்கள், வேலூரில் இருந்து திருச்சிக்கு 5 பஸ்கள் என 103 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 10, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜய கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜனவரி 10) நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News January 10, 2025

வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் வருகிற (ஜனவரி 15 ) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு 

image

வேலூர் மாவட்டத்தில் எஸ்.ஐ.க்கள் 2 பேர் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்த ராஜகுமாரி, குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐயாகவும், அங்கு பணியாற்றி வந்த அஜந்தா கே.வி.குப்பம் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!