India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா கீழ்முட்டுக்கூர் கிராமத்தில் மாடு விடும் விழா நேற்று நடந்தது. இதில் 128 மாடுகள் பங்கேற்றன. இதில், மாடுகள் முட்டி ஒரு போலீசார் உள்பட 12 பேர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தை இன்று கூடியது. இதில், செம்மறி ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் ஒரு ஆட்டின் விலை ரூ.15 ஆயிரத்துக்கும், ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ.35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விற்கப்பட்டது. மேலும் இன்று ஒரே நாளில் 18 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா கீழ்முட்டுக்கூர் கிராமத்தில் மாடு விடும் விழா நேற்று நடந்தது. இதில் 128 மாடுகள் பங்கேற்றது. இதில் மாடுகள் முட்டி ஒரு போலீசார் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சென்றடையும் வகையில் 19 அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம்கள், ஒற்றை சாளர முறையில், அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம் காட்பாடி பி.டி.ஓ அலுவலகத்தில் வரும் 24-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் வேலூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சை சோதனை செய்தனர். அதில் புதுச்சேரியை சேர்ந்த தினேஷ் (20), ராம்குமார் (28) ஆகிய 2 பேர் கொண்டு பையில் 2 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் மாடு விடும் விழாவில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படுகிறது. அதன்படி வாடிவாசல் முதல் ஓடி சென்று சேருமிடம் வரை 2 பக்கங்களிலும் 8 அடி உயரத்தில் 200 மீட்டர் நீளத்திற்கு இரட்டை தடுப்பான்கள் அமைக்க வேண்டும். ஓடுதளத்தில் 150 மீட்டருக்குள் யாரையும் அனுமதிக்க கூடாது. அரசாணை இல்லாமல் விழா நடத்தினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று நடத்திய சோதனையில் 2 கிலோ கஞ்சா, 23 மது பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
கே.வி. குப்பம் தாலுகா, லத்தேரி அடுத்த பனமடங்கி கிராமத்தில் மாடு விடும் திருவிழா நேற்று நடந்தது. இதில் 152 மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடின. வாடிவாசலில் இருந்து, ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது மாடுகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர்.
தமிழகத்தில் காணும் பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான வேலூர் கோட்டை, அமிர்தி பூங்கா, மோர்தானா அணை உள்ளிட்ட இடங்களுக்கு அதிகளவு பொதுமக்கள் குடும்பத்துடன் செல்வார்கள்.இதையொட்டி மாவட்டம் முழுவதும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.