India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (18.08.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, திட்ட இயக்குநர் காஞ்சனா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று(ஆக.18) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், திட்ட இயக்குநர் காஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஐடி நிறுவனத்தில் பணியாற்றி பிரேக் எடுத்துள்ள பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஜோஹோ சார்பில் மறுபடி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தேர்வாகும் நபர்களுக்கு 3 மாத பயிற்சியுடன் பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 22ம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 23ம் தேதி நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க <
வேலூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 19) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.
1.வேலூர் மாநகராட்சி செல்வ விநாயகர் திருமண மண்டபம் வேலப்பாடி,
2. எஸ்பி மஹால் சத்துவாச்சாரி
3. பாலாஜி திருமண மண்டபம் தெள்ளூர்
4. குமரன் மஹால் வேப்பம் பட்டு
5. பிஎஸ்ஆர் மஹால் பேரணாம்பட்டு
6. மகாதேவமலை கோயில் மண்டபம் காங்குப்பம் மனுக்களை அளித்து பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேலூர் மாநகராட்சியில் செவிலியர், லேப் டெக்னீசியன், பார்மாஸிஸ்ட், எம்எல்ஹெச்பி, ஹெல்த் இன்ஸ்பெக்டர், UHN, MPHW கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆக.29ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் <
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை (ஆக.19) பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் மற்றும் பல்கலைத்துறை அமைச்சர் பங்கேற்க உள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர், பேராசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் அனைவரும் பெரும் உற்சாகத்துடன் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர்.
வேலூரில் உள்ள VIT பல்கலைக்கழகத்தின் 40வது பட்டமளிப்பு விழா நேற்று(ஆக.17) சிறப்பாக நடைபெற்றது. இதில் பல துறைகளில் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்றனர். விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். பல்கலைக்கழக வேந்தர், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
வேலூர் பெரிய அல்லாபுரத்தை சேர்ந்தவர் ராஜாராம்(40). இவர் தனது பைக்கில் கணியம்பாடி அருகே சென்ற போது, நிலை தடுமாறிய பைக் சிறுபாலத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜாராமை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஆகஸ்ட் 17) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE
Sorry, no posts matched your criteria.