Vellore

News April 25, 2025

வேலூர் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

image

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. குடியாத்தம்- 04171 229100 , வேலூர்- 0416 2221204. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.

News April 25, 2025

காட்பாடி ரயிலில் 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

அசாம் மாநிலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காட்பாடி ரயில் நிலையம் வந்தது. காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் ரயில் பெட்டியில் ஏறி சோதனை செய்தனர். அப்போது ரயிலின் பின்புறம் உள்ள பொது பெட்டியில் 15 பைகளில் சுமார் 450 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News April 25, 2025

இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News April 24, 2025

வேலூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் மே 2-ந் தேதி காட்பாடி விளையாட்டு அரங்கில் மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெறுகிறது. 16 முதல் 25 வயதுடையவர்கள் கலந்து கொள்ளலாம். மேலாளர் கட்டாயம் தேவை. வயது சான்றிதழும், கல்வி நிறுவன சான்றிதழும் தேவை. போட்டி போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது.

News April 24, 2025

பில்லி, சூனியம் நீக்கும் மார்க்கபந்தீஸ்வரர்

image

வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரத்தில் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற பெயரும் உண்டு. எனவே தான் இந்த ஆலயம் ‘விரிஞ்சிபுரம்’ என்றானது. கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இங்கு உள்ள தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.

News April 24, 2025

வேலூரில் நாளை விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை ஏப்ரல் 25-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2025

ரவுடி நாகேந்திரன் மீண்டும் வேலூர் சிறையில் அடைப்பு

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வேலூர் சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நாகேந்திரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

News April 23, 2025

வேலூர் காவல் துறை சார்பில் செய்தி குறிப்பு

image

வேலூர் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உங்கள் பகுதியில் விற்கப்படும் சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து, உங்களின் சுய விபரங்களை வெளிப்படுத்தாமல் புகாரளிக்க, Drug Free Tamil Nadu தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்ட செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 23, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல். 23) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News April 23, 2025

வேலூர் அருகே பெண் தற்கொலை

image

வேலூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (34). இவரது மனைவி ராஜகுமாரி (29). ராஜகுமாரிக்கு கடந்த சில மாதங்களாக தீராத நோயினால் பாதிக்கப்ட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் கடந்த 21-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு கொண்டார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!