India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் 1 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மற்றும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) வருகிற பிப்ரவரி 10-ம் தேதி மற்றும் 17-ம் தேதி அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்பட உள்ளது. எனவே முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் குறைதீர்வு கூட்டம் இன்று (பிப்ரவரி 5) நடந்தது. இந்த குறைதீர்வு கூட்டத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். <
ஆரணி பகுதியை சேர்ந்தவர் கோகுல்நாத் (30) மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் பைக்கில் சென்றார். அப்போது எதிரே வந்த பைக்கில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் படுகாயமடைந்த கோகுல்நாத்தை, அப்பகுதி மக்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, அரசு அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள், புகாா்கள் தொடா்பாக அரசு அலுவலா்கள் நேரடியாகவோ, இடைத்தரகா்கள் மூலமாகவோ லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாா் தெரிவிக்கலாம். தகவலை நேரிலோ, கைப்பேசி மூலமாகவோ தெரிவிக்கலாம். வேலூா் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலக தொலைபேசி 0416 – 2220893 எண்ணில் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவ ஆட்சேர்ப்புக்கான முகாம் நாளை (பிப்.05) முதல் 15ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்ணா விளையாட்டு திடலில் நடைப்பெற உள்ளது.இதில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் இராணுவ ஆட்சேர்ப்புக்கான முகாமில் பங்கு பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (பிப்.04) தெரிவித்துள்ளார்.மேலும் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
வேலூர் மாவட்டத்தில் பஸ் வசதி இல்லாத கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு அளிக்கலாம் என கலெக்டர் அறிவித்திருந்தார். அதன்படி, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் ராஜாதோப்பு, சதுப்பேரி, குப்பம், சிங்கல்பாடி, அத்தியூர் உள்ளிட்ட 29 கிராமங்களுக்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமியிடம் மனு அளித்தனர்.
ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் லோகநாதன், கருணாநிதி, பெரியார் 3 பேருக்கும் வழி பிரச்னையால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று லோகநாதன் மகன் சேகர் பெரியாரை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் பெரியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வேப்பங்குப்பம் போலீசார் லோகநாதன், சேகர், விஜயகுமார், உள்பட 7 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
காட்பாடி செங்குட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு (50) டிரைவர் இவரது மனைவி நாகலட்சுமி கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு சித்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த பாபு தனது தங்கை மகனுக்கு வாட்ஸ் ஆப்பில் நான் மருந்து குடித்து சாகப் போகிறேன் என கூறிவிட்டு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி மற்றும் குடியாத்தம் ஆகிய காவல் உட்கோட்ட எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டு இருக்கிறது. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பாக புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.