India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவை சேர்ந்தவர் பாபு அகமது ஷேக் (55), கடந்த 2021ஆம் ஆண்டு காட்பாடி அருகே ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி உடல் நலக்குறைவால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து அவர், நேற்று (பிப்ரவரி 17) பாபு அகமது ஷேக் தப்பி சென்றார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 22தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மற்றும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் குறித்து தெரிவிக்க ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு காவலர் நியமிக்கப்பட்டு, “போலிஸ் அக்கா” திட்டம் செயல்படுத்தும் துவக்க விழா, பிப்ரவரி 18ஆம் தேதி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் எஸ்பி மதிவாணன் தலைமையில் கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைக்க உள்ளார்.
வேலூர் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை சுற்றியுள்ள மலைப்பகுதியில் நேற்று (பிப்.,17) சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பேரலில் 100 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அங்கேயே ஊற்றிய அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இன்று தமிழக ஆந்திர மாநில எல்லைப் பகுதியான காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை சோதனைசாவடியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முகமது பஷீர் என்பவர் ஆந்திராவில் இருந்து வந்த தமிழக அரசு பஸ்ஸில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், மேலே உள்ள புகைப்படத்தில் போலீசாரின் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்கள் தெரிவிக்கலாம்.
வேலூர் மாவட்டத்தில் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் Zero Effect Zero Defect (ZED) சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள், பலன்கள் மற்றும் அரசு சலுகைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி மாவட்ட தொழில் மையத்தில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (பிப்ரவரி 17) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (பிப்.17) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 555 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமார், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளாக வனத்துறையினர் தீ தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர், குடியாத்தம், ஆற்காடு பேர்ணாம்பட்டு, ஒடுக்கத்தூர் ஆகிய வனச்சரக பகுதிகளில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். தீ வைப்பவர்கள் கண்டறியப்பட்டால் வழக்கு பதிவு செய்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வேலூர் அருகே ரயிலில் பயணிக்கும் போது பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு, ரயிலிருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்த 4 மாதங்கள் ஆனா சிசு இறந்தநிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு எடுக்கப்பட்ட து, இந்தநிலையில் ரயில்வே துறை கேட்டுக்கொண்டதிற்கினங்க, மருத்துவர்கள் சிசுவை உடற் கூராய்வவிற்கு உட்படுத்தியுள்ளனர். எந்த காரணத்தால் குழந்தை உரிழந்தது என கண்டறியவே இந்த ஆய்வை நடத்தியதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.