India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 25.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்டம் மாங்காய் மண்டி அருகே நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சி கடந்த மாதம் 12-ம் தேதி திறக்கப்பட்டது. இன்று வரை அரசு பொருட்காட்சியை 22,062 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும் வருகிற பிப்ரவரி 28-ம் தேதி நிறைவு பெற உள்ளது. எனவே பொதுமக்கள் அதிகளவில் வந்து அரசு பொருட்காட்சியை கண்டுகளிக்குமாறு வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாற்றுதிறனாளிகள் துறை சார்பில் 19 அரசு துறைகளுடன் இணைந்து ஒற்றை சாளர முறையில் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் பேர்ணாம்பட்டு பிடிஓ அலுவலகத்தில் நாளை (பிப்ரவரி 26) நடைபெற உள்ளது. எனவே பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.
மாற்றுதிறனாளிகள் துறை சார்பில் 19 அரசு துறைகளுடன் இணைந்து ஒற்றை சாளர முறையில் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் பேர்ணாம்பட்டு பிடிஓ அலுவலகத்தில் வருகிற நாளை (பிப்ரவரி 26) நடைபெற உள்ளது. எனவே பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் குறைகேட்பு நாள் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வருகிற (பிப்ரவரி 28) பிற்பகல் 3.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் இந்த குறைகேட்பு கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் ,புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்தார்,கடந்த 2022ம் ஆண்டு புதுச்சேரி ஊசுட்டேரி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது தந்தை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி இழப்பீடாக ரூ.1 கோடியே 12 லட்சத்து 53 ஆயிரம் வழங்க ஆணையிட்டார்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காட்பாடி வழியாக திருத்தணிக்கு செல்லும் அரசு பஸ் நேற்றிரவு காட்பாடி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ரங்கசமுத்திரம் பகுதியில் (பிப்ரவரி 22 )நேற்று முன்தினம் மாலை காவியா (23) என்ற பெண் தனது வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 23.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.