Vellore

News April 11, 2025

தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய எண்கள்

image

மாவட்ட ஆட்சியர் – 0416-2252345, மாவட்ட வருவாய் அலுவலர் – 0416-2253502, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 0416-2232999, சார் ஆட்சியர் – 9445000417, திட்ட அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை – 7373704205, மாநகராட்சி ஆணையர் – 7397389320, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9445008159, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) – 7402606606, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) – 7824058059, மக்கள் தொடர்பு அலுவலர் – 9498042453

News April 11, 2025

இன்ஸ்டா காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

image

பட்டியூர் பகுதியில் காதல் ஜோடி நேற்று (ஏப்ரல் 10) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், லத்தேரியைச் சேர்ந்த மணிகண்டனுக்கு (27) ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த இவர், கோகிலா (24) என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து கொண்டார். பெண் வீட்டார் பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

News April 11, 2025

ரேஷன் அட்டையில் திருத்தும் செய்யணுமா?

image

நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் செய்து கொள்ளலாம். இலவசமாகவே அப்டேட் செய்து கொள்ளலாம். கட்டணம் இல்லை. மறக்காமல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News April 11, 2025

வேலூர் மாவட்டத்தில் முதல்வர் திறந்து வைக்கிறார்

image

பொது நூலகத்துறை மூலம் குடியாத்தம், கே வி குப்பம், காட்பாடி ஆகிய வட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட கிளை நூலகங்களை காணொளி காட்சி வாயிலாக இன்று (ஏப்ரல்11) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி குடியாத்தம் புதுப்பேட்டை கிளை நூலக கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2025

வேலூர் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணி விவரம் இன்று (10-4-2025) வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மக்களின் பாதுகாப்புக்காக மாவட்ட காவல்துறை இரவு நேரங்களில் ரோந்து பணி செய்து வருகின்றனர். இதனால் மக்களின் பாதுகாப்பு மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளிக்க மேற்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News April 10, 2025

வேலூர் மாவட்டத்தில் 292 பணியிடங்கள் அறிவிப்பு

image

வேலூர் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 292 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் பிடிஓ அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஏப்.26 மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். *செம வாய்ப்பு. தெரிந்த 18-40 வயது பெண்களுக்கு பகிரவும்*

News April 10, 2025

வேலூர் மாவட்ட வன அலுவலர் இடமாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் மாவட்ட வன அலுவலராக குருசாமி தபேலா பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் உள்ள பசுமை தமிழ்நாடு திட்ட அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக வேலூர் மாவட்ட வன அலுவலராக ஊட்டி டேன்-டீ நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 10, 2025

மாநகராட்சியில் வேலை: நாளை கடைசி நாள்

image

சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள நகர்புற சுகாதார நல மையங்களில் 345 பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரி, நர்ஸ், சுகாதார பணியாளர், சமூக சேவகர், பேறுகால பணியாளர், எக்ஸ்ரே வல்லுநர், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை 5 மணிக்குள் ரிப்பன் மாளிகைக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News April 10, 2025

ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 10, 2025

ரயிலில் தலையை வைத்து இருவர் தற்கொலை

image

காட்பாடி – லத்தேரி இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில், இன்று (ஏப்ரல் 10) அதிகாலை ஆண் – பெண் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்த இருவர் மீதும், சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் ரயில் ஏறி இறங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார், உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக தற்கொலை செய்து கொண்டனர்? என விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!