India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காட்பாடியை அடுத்த முத்தரசி குப்பத்தை சேர்ந்த, 22 வயது பெண், வீட்டு பின்புறம் குளித்துள்ளார்.இதை அதே பகுதியை சேர்ந்த ரங்கன் பார்த்துள்ளார். இதை கவனித்த அந்த பெண், ரங்கனை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கன், உறவினர்கள் அப்பெண்ணை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்தப் புகாரின்பேரில் மூவர் மீது, காட்பாடி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நேற்று (மார்ச் 3) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 492 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமார், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (மார்ச் 3.03.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளவும்.
அரசு திட்டங்களை விவசாயிகள் கால தாமதமின்றி பயன்பெற தமிழ்நாட்டில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 66763 விவசாயிகளில், 33645 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகளை இணைக்கும் பணி சம்மந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறுமாறு வேலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னை. செங்கல்பட்டில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 29 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். இன்றைக்குள் (மார்.3) இந்த லிங்கை <
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியில் உள்ள ஊதுவத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று (மார்ச் 2) மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இச்சம்பவத்தில் 10 கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாகின. மேலும் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
வேலூரில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 29 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த லிங்கை <
2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், மாணவர்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள், ஐயங்களைத் தெரிவிக்க வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9498383075, 9498383076 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னையிலிருந்து மைசூருக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் இன்று முதல் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் வண்டி எண் 16551 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல் நிறுத்தங்களில் நின்று செல்லும். ஆனால் ரயில் கட்டணம் அரக்கோணத்திலிருந்து காட்பாடிக்கு செல்ல இதற்கு முன்பு ரூ. 55 வசூலிக்கப்பட்டது. இனி 40 ரூபாயாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அருகில், நேற்று முதல்வர் பிறந்தநாள் என்பதால் அவரை வாழ்த்தி இரும்பு ஷீட்டரில் பேனர் ஒட்டப்பட்டது. இரும்பு ஷாட்டரில் பின்புறம் குப்பைகளை எரித்ததால், இரும்பு ஷேட்டர் சுடேறியது, இதன் காரணமாக ஷேட்டரில் ஓட்டப்பட்ட பேனர் பற்றி எறிந்தது, இதனால் அப்பகுதியில் சிக்னலில் நின்றிருந்த பொது அச்சமடைந்தனர். பின்னர் ஒருவழியாக தீ அணைக்கபட்டது.
Sorry, no posts matched your criteria.