India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பெரிய ஏரியூர் கொல்லைமேட்டில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று, பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு 108 பால் குட ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சாமியாடிய நபர் ஒருவர் வினோதமாக மரத்தில் ஏறியும், மரம் விட்டு மரம் தாவியும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். காப்பு கட்டிய ஏராளமான பெண்களும் அருள் வந்து கொளுத்தும் வெயிலிலும் சாமியாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 12) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பங்குனிமாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி ரொம்ப ஸ்பெசல் தான். இன்றைய தினம் சிவனுக்கு பால் அபிஷேகம் (or) பூக்களால் அர்ச்சனை செய்தால் பல தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இன்று நீங்கள் செல்ல வேண்டிய சிவன் கோவில்கள் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தேஸ்வரர் கோவில், மகாதேவ மலை கோவில், குடியாத்தம் காசி விஸ்வநாதர் கோவில், வலவனூர் விஸ்வநாதீஸ்வரர் கோவில். *நண்பர்களுக்கும் பகிரவும்*
இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <
குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி, பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியான சுப்பிரமணி (63) அந்த சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி, அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம் அடுத்த சைனகுண்டாவை சேர்ந்தவர் லித்திகா (11). இவர் அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பள்ளிக்கு செல்லவில்லை. காய்ச்சல் அதிகமானதால் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொது மக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (11-4-2025) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தின் ஒப்பற்ற முன்னணி விடுதலைப் போராட்ட வீரர், தமிழறிஞர், தூயதமிழ்க்காவலர் கு.மு.அண்ணல் தங்கோவின் 122 வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகின்றது. இதைமுன்னிட்டு, தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் குடியாத்தம் நேரு பூங்காவில் நாளை (ஏப்ரல் 12 ) காலை 9 மணி அளவில் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கு மணிமேகலை விருதினை பெறுவதற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் சிறந்த செயல்பாடுகளுக்கான சான்றுகள், அறிக்கைகள், புகைப்படங்கள் மற்றும் பத்திரிக்கை செய்திகள் கொண்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் மகளிர் திட்ட அலுவலகத்தில் சமர்பித்து பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 8667388982 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பங்குனி மாத பௌர்ணமியையொட்டி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து நாளை (ஏப்ரல் 12) முதல் வேலூரில் இருந்து 50 சிறப்பு பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 30, ஆற்காட்டில் இருந்து 20 பஸ்கள் என மொத்தம் 100 பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையை பொருத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். *திருவண்ணாமலை செல்வோருக்கு பகிரவும்*
Sorry, no posts matched your criteria.