Vellore

News March 5, 2025

வேலூர் எஸ்பி தலைமையில் குறைதீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று (மார்ச் 5) நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள், அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 5, 2025

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News March 5, 2025

விதிமீறிய 600 ஆட்டோக்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்

image

வேலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் அடங்கிய 2 குழுவினர் வேலூர் புதிய, பழைய பஸ்நிலையங்கள், கிரீன்சர்க்கிள், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் கடந்த 4 நாட்களில் விதிமீறிய 600 ஆட்டோக்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

News March 5, 2025

வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா

image

வேலூரில் அமைந்துள்ள அமிர்தி உயிரியல் பூங்கா 25 ஹெக்டேர் அளவுக்குப் பரந்து விரிந்துள்ளது.இந்த பூங்காவில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது.மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள், குரங்குகள், சிவப்பு தலை கிளிகள்,காதல் பறவைகள்,முதலைகள்,காட்டுப் பூனைகள்,கழுகுகள்,காட்டுக் கிளிகள்,முயல்கள் மற்றும் மலைப்பாம்புகள் முதலியவற்றை கண்டு ரசிக்கலாம். அப்புறம் என்ன ஒரு ட்ரிப் போயிட்டு வாங்க. நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News March 5, 2025

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

image

தமிழக முழுவதும் பிளஸ்-1 பொதுத் தேர்வு இன்று (மார்ச் 05) தொடங்க உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் 80 மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 7,356 மாணவர்கள், 8,725 மாணவிகள் என மொத்தம் 16,081 பேர் எழுத உள்ளனர். இத்தகவலை வேலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக தேர்வு மையங்கள் தயார் செய்யும் பணியில் ஆசிரியர்கள் நேற்று ஈடுபட்டனர்.

News March 5, 2025

மார்ச் மாதத்தில் 11 இடங்களில் மாடுவிடும் விழா நடத்த அனுமதி

image

வேலூர் மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் 11 இடங்களில் மாடுவிடும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வரும் 10ஆம்தேதி வேலம்பட்டு, நாகநதி ஆகிய கிராமங்களிலும், 12ஆம் தேதி ராமாபுரம், 13ஆம் தேதி தேவிசெட்டிக்குப்பம், 14ஆம் தேதி ஏரிப்புதூர், 21ஆம் தேதி வண்டறந்தாங்கல், 22ஆம் தேதி ஊனைமோட்டூர், 29ஆம் தேதி கொட்டாய்மேடு ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

News March 4, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் மற்றும்அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (மார்ச் 04) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News March 4, 2025

சித்தா, ஆயுர்வேதா படித்தவர்களுக்கு அரசு வேலை

image

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபடியாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் <>ஆன்லைன்<<>> வழியாக இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

News March 4, 2025

டெலிகிராமில் லிங்க் அனுப்பி ரூ.6.38 லட்சம் பறிப்பு

image

காட்பாடியை சேர்ந்தவர் பிரதாப், 34, தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல்போனுக்கு டெலிகிராமில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக ஒரு மெசேஜில் கூறப்பட்டிருந்தது. இதை நம்பி, அந்த எண்ணுக்கு 6.38 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். பணம் திரும்ப வராததால், சந்தேகமடைந்து அந்த மொபைல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிரதாப், போலீசில் புகாரளித்துள்ளார்.

News March 4, 2025

7 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

image

வேலூர் காவல்துறைக்கு சட்டவிரோதமாக புகையிலை பதுக்கி இருப்பது குறித்து தகவல் வந்ததையடுத்து, அரியூர் காவல் ஆய்வாளர்  தலைமையிலான போலீசார் நேற்று அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  செம்பேடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சுப்பிரமணி என்பவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து சுப்ரமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!