Vellore

News March 23, 2025

தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

image

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

News March 23, 2025

வேலூரில் மழைக்கு வாய்ப்பு

image

வேலூரில் இன்று (மார்.23) காலை 11 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்

News March 23, 2025

வேலூர் அருகே தீ விபத்தில் மூதாட்டி பலி 

image

கே.வி.குப்பம் மேல்மாயில் பகுதியை சேர்ந்த யசோதம்மாள் (70). இவரது வீட்டில் நேற்று திடீரென மின்வயர்களில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயில் சிக்கிய யசோதம்மாள் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கே.வி. குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 22, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று மார்ச் 22 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்

News March 22, 2025

குழந்தை பாக்கியம் அருளும் அம்மன் 

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள  பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ எல்லையம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாகும். குழந்தை பாக்கியம் வேண்டி கோவிலில் உள்ள மரத்தில்  தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் எல்லையம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் பலர் வழிபடுவர். ஷேர் பண்ணுங்க

News March 22, 2025

குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

image

கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

News March 22, 2025

வேலூர் நம்ம ஊரு திருவிழா ஆட்சியர் அறிவிப்பு

image

சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக் குழுக்கள் தோ்வு வேலூா் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22, 23) ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். கடந்தாண்டு கோவை, தஞ்சை, வேலூா், சேலம் திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி ஆகிய 8 இடங்களில் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் அதே 8 இடங்களிலும் இந்தக் கலை திருவிழா நடத்தப்பட உள்ளது

News March 22, 2025

வேலூர் அரசு பள்ளிகளில் இனைய வசதி

image

வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இணையவசதி ஏற்படுத்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாநில திட்ட இயக்குநா் உத்தரவின்பேரில் வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் வரும் மாா்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க திட்டம்.

News March 22, 2025

வேலூரில் மாபெரும் புத்தகத் திருவிழா

image

வேலூர் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை சார்பில், 3-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா வேலூர் கோட்டை மைதானத்தில் இன்றுமுதல் 30-ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 80 அரங்குகளில் 200-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

News March 21, 2025

வேலூரில் 3,900 நீர்நிலை பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன

image

வேலூர் வனக்கோட்டத்தில் வேலூர், அமிர்தி உட்பட 6 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள ஏரி, ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை வசிக்கும் பறவை இனங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 84 வகை நீர்நிலைகளை சுற்றிவாழும் 3,900 பறவைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் விவரங்கள் சென்னையில் உள்ள வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

error: Content is protected !!