Vellore

News March 29, 2024

வேலூர்: 2 லட்சம் பணம் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு சோதனை சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த சென்னையை சேர்ந்த ஜெகதீஷ் குமார் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து காட்பாடி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

News March 28, 2024

வேலூர் 13 வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிப்பு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 50 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 37 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டதாகவும் 13 வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமி என்று (மார்ச் 28) தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

வேலூரில் மீண்டும் சதம் அடித்த வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 96 பாரன்ஹீட் வெயில் பதிவாகி வந்த நிலையில் இன்று (மார்ச் 28) 100.6°F பதிவானது. மேலும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

திமுக வெற்றி பெறும் நடிகர் மன்சூர் அலிகான்

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை இன்று (மார்ச் 28) கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நடிகர் மன்சூர் அலிகான் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். அப்போது மன்சூர் அலிகான் “தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் (திமுக) நீங்கள் தான் வெற்றி பெறப் போகிறீர்கள் ஆனால் வேலூரில் நான் வெற்றி பெறுவேன்” என கூறி வாழ்த்தினார்.

News March 28, 2024

வேலூர் முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

image

மக்களவை தேர்தலையொட்டி வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் பசுபதி, பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேச்சையாக போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என மாவட்ட தேர்தல் அலுவலரும். கலெக்டருமான சுப்புலட்சுமி தெரிவித்தார்.

News March 28, 2024

வேலூர் தொகுதியில் போட்டியிட 50 பேர் மனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் கட்சிகள், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி நேற்று (மார்ச் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

image

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் இன்று (மார்ச் 27) நடந்தது. இந்த கூட்டத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த காவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

News March 27, 2024

வேலூர்: ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு

image

வேலூா் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சாா்பில் புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏ.சி.சண்முகம் மற்றும் அவரது மனைவி லலிதா லட்சுமி ஆகியோா் பெயரில் மொத்தம் ரூ. 152 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரத்து 818 மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2024

வேலூர் அமைச்சரை வரவேற்ற மாவட்ட செயலாளர்

image

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்றிரவு (மார்ச் 26) வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகே வந்த திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை வேலூர் மத்திய மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் மாலை அணிவித்து வரவேற்றார். இதில் வேலூர் எம்பி வேட்பாளர் கதிர் ஆனந்த் உடன் இருந்தார்.

News March 27, 2024

வேலூர் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த கலெக்டர்

image

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள ஊரீஸ் கல்லூரி அருகே விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி இன்று (மார்ச் 27) கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!