India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கோடை மழையுடன் தொடங்கினாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு ஊர்களின் சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை போல வேலூரிலும் அமைக்கபடுமா என்பது வேலூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னையை சேர்ந்த ஹேமலதா(22) காஞ்சிபுரத்தை சேர்ந்த கவுதம் இருவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த மாதம் 29 ஆம் தேதி இருவரும் ஆற்காடு அருகே கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து நேற்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்
வேலூர் மக்களவைத் தொகுதி பாஜ கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேலூர் தனியார் ஹோட்டலில் நேற்று (மே 4) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “வேலூர் தொகுதியில் தாமரை சின்னம் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். தமிழகத்தை பொறுத்தவரை 15 தொகுதிகளில் பாஜ கூட்டணி வெற்றி பெறும். இந்திய அளவில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்” என தெரிவித்தார்.
குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை, ஏரியின்கீழ்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் குமாா் (24). கட்டடத் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை முதல் மாயமானார். அவரது பெற்றோா் தேடி வந்த நிலையில் நேற்று தட்டப்பாறை அரசுப் பள்ளி வளாகத்தில் கால்வாயில் இருந்து குமாா் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவரை மா்ம நபா்கள் தலையில் கல்லால் தாக்கிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்த சுந்தரி சிதிலமடைந்த குடிசையில் வாடகைக்கு வசிக்கிறார். இவருக்கு மாற்றுத்திறனாளி மகன் மற்றும் மகள் ஒருவர் இருக்கின்றனர். இவருக்கு எந்த ஒரு அரசு நிவாரணமும் கிடைப்பதில்லை. இதையறிந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் அவர்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். மேலும் அந்த குடும்பத்திற்கு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி பென்ஷன், தங்க வீடு அரசு வழங்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
வேலூர் மாவட்டத்தில் வேலூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்துவது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று பாஜக வேட்பாளரும், புதிய நீதிக்கட்சியின் நிறுவனா் தலைவருமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். வேலூரில் நேற்று செய்தியாளா்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
வேலூர் கோட்டை விஜயநகரப் பேரரசால் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். 133 ஏக்கர் பரப்பளவில் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையச் சுற்றி அமைந்துள்ளது. இது பல மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 1806 ஆம் ஆண்டு பிரிட்டிஷாருக்கு எதிராக முதன்முதலில் கிளர்ச்சி இக்கோட்டையிலேயே நடைபெற்றது. இக்கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோயில், தேவாலயம், பள்ளிவாசல், அரசு அருங்காட்சியகம் உள்ளது.
வேலூர் எம்பி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மே 4) தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு நாளை (மே 5) நடைபெறவுள்ளது. இத்தேர்வுகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறும் வேலூர் , காட்பாடி, கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 9 தேர்வு மையங்களில் மொத்தம் 5266 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று தனது தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் அருகே ஆளில்லாத ரயில் பாதையைக் கடக்க முயன்ற சிற்றுந்து மீது ரயில் மோதிய விபத்தில் 9 கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.
இந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 551, அதற்கான வட்டி, வழக்கிற்கான மொத்த செலவு ஆகியவற்றுடன் சோ்த்து வழங்க உத்தரவிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.