India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி தலைமையில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று (ஏப்ரல் 1) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (40), இவரது மனைவி கஸ்தூரி (29). இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கஸ்தூரி கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் வரதட்சணை கேட்டு வேணுகோபால் தனது மனைவியை அடித்துள்ளார். இது குறித்து கஸ்தூரி குடியாத்தம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்து வேணுகோபாலை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள கணியம்பாடி (வல்லம்) உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மார்ச் 23ஆம் தேதி அறிவித்தது. அதன்படி இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
வேலூர், குடியாத்தம் தாலுகா வேப்பூர் கிராமத்தில் ஏரியில் குளித்த 4 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில் அவர்களின் உடல்களுக்கு கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார் தேசிய ஜனநாயக கூட்டணி வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம். உடன் புதிய நிதி கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்கள் இருந்தனர்.
வேலூர் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (மார்ச்.31) மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் கடந்த வாரத்தை விட மீன்களின் விலையும் உயர்ந்தது. பெரிய வஞ்சரம் மீன் ரூ.1400, சிறிய வஞ்சரம் மீன் ரூ.800, இறால் ரூ.500 முதல் 450, கட்லா ரூ.160, நண்டு ரூ.400 முதல் 450, மத்தி ரூ.140 முதல் 160 என மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் உடன் தேர்தல் செலவினங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேர்தல் செலவின பார்வையாளர் அமித் கோயல் தலைமையில் இன்று (மார்ச்.31) நடந்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் செலவினங்களுக்கு என வேட்பாளர் தனி வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டார்.
மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி வேலூரில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகொண்டா கந்தனேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் பசுபதிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இதையொட்டி பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். நேற்று (மார்ச் 30) இவரது வீட்டில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி வீட்டில் இருந்த பிரிட்ஜ், பேன், மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின. இதையடுத்து அப்பகுதி மக்கள் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 31 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகப்பட்சம் நோட்டாவுடன் சேர்த்து 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். எனவே கூடுதலாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (பேலட் யூனிட்) பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியாத்தம் அலங்காநல்லூர் பாலாற்றில் மணல் கடத்துவதாக குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு நேற்று (மார்ச் 30) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் 2 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.