India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடுகந்தாங்கல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பறக்கும் படை குழுவின் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமி நேற்று இரவு திடீர் ஆய்வு செய்தார். பறக்கும் படை குழுவினர்கள் வாகன தணிக்கை ஈடுபட்டு வரும் குறிப்பேடுகளை ஆய்வு செய்தார். சந்தேகத்திற்கு இடமாக செல்லும் வாகனங்களை தீவிரமாக சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம், பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு இன்று சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.
வேலூர் மக்கள்வைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இறைவன்காடு பகுதியில் இன்று (ஏப்ரல் 13) நடந்த முத்தரையர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த கூட்டத்திற்கு முத்தரையர் சங்க தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வேலூர் போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு மக்கான் சிக்னல் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று (ஏப்ரல் 13) நீர் மோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்களவை தேர்தல் முன்னிட்டு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்கள் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உள்ள ஓட்டல்களில் உள்ள பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீறி மது விற்பனை செய்தால் சட்டபடி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 13) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்ரல் 12) காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் 60 லிட்டர் கள்ளச்சாராயம், 43 மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
காட்பாடி அடுத்த பொன்னை கூட்ரோட்டில் திருவலம் போலீசார் இன்று (ஏப்ரல் 12) ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். அதில் இருவரும் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா(36), முருகன் (36) என்பதும் இவர்கள் திருவலம் பகுதிகளில் பல பைக்குகள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார். மேலும் அவர்களிடம் இருந்து 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான (Micro observer) இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஏப்ரல் 11) நடந்தது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில் தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ் குமார் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பேசினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 12) நடந்தது. இந்த தபால் வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் சத்துவாச்சாரி போலீசார் நேற்றிரவு (ஏப்ரல் 11) பிள்ளையார் குப்பம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு லோடு வேன் வந்தது. போலீசாரை பார்த்ததும் வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் லோடு வேனை சோதனை செய்த போது மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் வேனை போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.