India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 15 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 15 நிலை கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் 9 பறக்கும் படை குழுக்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 15) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்ரல் 14) காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் 330 லிட்டர் கள்ளச்சாராயம், 110 மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் கோட்டை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள கோட்டை முனீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 13) முனீஸ்வரருக்கு சிறப்பு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்திற்கு குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி பகுதியில் அவரது மனைவி சங்கீதா கதிர்ஆனந்த் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், சிற்றுண்டி கடையில் இட்லி சுட்டு வாக்குகள் சேகரித்தார்.
அண்ணல் அம்பேத்கர் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 14) மேலும் மகான் சிக்னல் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு புதிய நீதி கட்சியின் நிறுவன தலைவரும் வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பாஜக மாவட்ட தலைவர் மனோகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வாக்கு பதிவு நாள் (ஏப்ரல் 19) மற்றும் வாக்கு பதிவிற்கு முன் நாள் ஆகிய இரண்டு நாட்களில் அச்சு ஊடகங்களில் தேர்தல் சம்பந்தமான விளம்பரங்களை மாவட்ட ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முறையான முன் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பிரசித்தி பெற்ற சாலை கெங்கை அம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் சார்பில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 19 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் , ஆண்கள் , பெண்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர் அம்மன் அருளை பெற்றனர்.
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின்134 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 14) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செல்லியம்மன் கோயில் அருகே உள்ள சாமுவேல் நகர்ப குதியில் பெண்கள் ஆட்டோ மோதியதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு பெண் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலையில் நடந்த இச்சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டம், பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.