India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் பணிகள் தீவிரம் நடந்து வருகிறது. வேலூர் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று இந்த ஆண்டின் அதிகபட்ச வெயிலாக 107.4°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஒரு மணிக்கு பிறகு 3 மணி வரை பொதுமக்கள் ஆர்வமுடன் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு செய்தனர். குறிப்பாக, அதிகமாக அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 53.98% வாக்கு பதிவும், குறைவாக குடியாத்தம் பகுதியில் 49.02 % மூன்று மணி நிலவரம் படி வாக்கு பதிவாகியுள்ளது. மொத்தம் வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19% வாக்குப் பதிவாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 7: 00 மணி முதல் 9 மணி வரை 10.57 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுபலட்சுமி இன்று (ஏப்ரல் 19)தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து வாக்கு பதிவுகள் நடந்து வருவதாகவும் அடுத்த கட்டமாக 11 மணிக்கு இரண்டாம் கட்ட நிலவரத்தை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (ஏப்ரல் 19) வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர் தொரப்பாடி எழில் நகரில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமி வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7,40,222 பேர், பெண் வாக்காளர்கள் 7,87,838 மற்றும் மூன்றாம் பாலினம் 213 பேர் என மொத்தமாக 15,28,273 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஒட்டுமொத்தமாக 1568 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு பணியில் சுமார் 2268 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காட்பாடி காந்தி நகர் பகுதியில் டான் பாஸ்கோ பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 154வது வாக்குச்சாவடி மையத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை. வாக்கை செலுத்தவந்த வாக்காளர்கள் வாக்கை செலுத்த முடியாமல் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.
அணைக்கட்டு, பெரிய தெள்ளூர் கிராமத்தை சேர்ந்த அபினேஷ் (12) அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வீட்டின் மொட்டை மாடியில் அபினேஷ் விளையாடி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேலே செல்லும் மின்கம்பிகள் உரசியதில் மின்சாரம் தாக்கி அபினேஷ் காயமடைந்தார். இதையடுத்து அபினேஷை அவரது பெற்றோர் மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஏ.சி.சண்முகம் உங்களுக்கு கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வேலூரில் நீங்கள் செய்த பணிக்கு உங்களை வாழ்த்துகிறேன். மக்களின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் பாராளுமன்றத்தை அடைவீர்கள் தேர்தலில் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அனைவரும் மறக்காமல் நாளை வாக்கு செலுத்துவோம். உங்கள் தொகுதியில் யார் யார் நிற்கிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது அறப்போர் செயலியையோ அல்லது கீழ்காணும் அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். வேலூர் – https://www.youtube.com/watch?v=qIFgLMWaToU
Sorry, no posts matched your criteria.