India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்குகள் எண்ணும் பணி ஜுன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வாக்கு எண்ணும் நாளன்று வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீறி மது விற்பனை செய்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஜுன் 1) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் நாளை (ஜூன்.2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூரில் நாளை, இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.
வேலூர் கொணவட்டம் பகுதியில் இன்று ( ஜூன் 1) இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த லாரி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விஷால், மகேஷ் ஆகிய இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் அசோக் நகர் பகுதியில் வேலூரைச் சேர்ந்த பாண்டிதுரைக்கு சொந்தமான ஆட்டோவில் கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். இதுகுறித்து தீயணைப்பு துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிலிண்டரை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
வேலூரில் விதிகளை மீறி இயக்கம் ஆட்டோ ஓட்டுநர்களை பற்றி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதன் காரணமாக இன்று காலை 11 மணியளவில் வேலூர் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் போக்குவரத்து ஆய்வாளர் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை விதிகள் பற்றியும் விதி மீறல்களை பற்றியும் அறிவுரை வழங்கினர். இதில் அப்பகுதியில் இயங்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது. மேலும் தகவல்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று (மே 31) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை நேற்று (மே 31) வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் கல்லூரி மாணவர்கள், பல் மருத்துவ சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் சாய்நாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு 10வது பட்டாலியன் என்சிசி மாணவர்களுக்கு இன்று (மே 31) வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதிகபட்சமாக இன்று (மே 31) 110.7°F வெயில் பதிவானது. மேலும் பகல் நேரத்தில் வெயிலுடன் சேர்ந்து அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இரண்டு நாட்களுக்கு வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்திய தொல்லியல் துறை அருங்காட்சியகம், வேலூர் கோட்டையின் பாதுஷா மற்றும் பேகம் மகாலில் இயங்கி வருகிறது. பல்லவ விஜயநகர ஆட்சியின் கீழ் இருந்த, வேலூர் மாவட்டத்தில் கிடைத்த கற்சிலைகள், வீரக்கற்கள் மற்றும் வேலூர் சிப்பாய் கலகம் பற்றிய ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது 1985-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.