India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் மொத்தம் 73.42% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் பசுபதியும், பாஜக சார்பில் ஏ.சி.சண்முகமும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News-உடன் இணைந்திருங்கள்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன் 3) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 118 மதுபாட்டில்கள், 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 10 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
2019 மக்களவைத் தேர்தல் வேலூர் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 8,141 (0.79%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் டாக்டர் பசுபதியும், பாஜக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகமும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜூன் 3) வேலூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் கிரீன் சர்க்கிள் அருகே அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் 1000 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த், எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் அலுவலர்களை மேசை வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி நேற்று (ஜூன் 2) வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் ரூபேஷ்குமார், உஜ்வல் போர்வல் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி, மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையின்போது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் மொத்தம் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜூன் 2) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 50 லிட்டர் கள்ளச்சாராயம், 1800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 151 மதுபாட்டில்கள், 250 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 34 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
காட்பாடி வண்டறதாங்கள் கிராமத்தைச் சேர்ந்த சந்திப், ராணுவ வீரர். விடுமுறைக்கு சொந்த ஊர் வந்துள்ளார். அப்போது அவரது மனைவி பிரியதர்ஷினிக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சந்திப் பிரியதர்ஷினியை தாக்கியுள்ளார். இது குறித்து பிரியதர்ஷினி காட்பாடி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நேற்று ராணுவ வீரர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கோடை காலத்து கடுமையான வெயிலை மழை வந்து தணித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூன் 1 ) வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் அதிகபட்சமாக 52.60மி.மீ மழை பதிவானது. மோர்தனா அணை 24 மி.மீ மழையும், குடியாத்தம் 14.60மி.மீ , கே.வி. குப்பம் 20மி.மீ, வேலூரில் 5.70மி.மீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 165.55மி.மீ மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்குகள் எண்ணும் பணி ஜுன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வாக்கு எண்ணும் நாளன்று வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீறி மது விற்பனை செய்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஜுன் 1) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.