India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தலசீமியா நோயால் உலகளவில் ஆண்டுக்கு 50,000 முதல் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாகவும், அதில் 80% இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நிகழ்வதாகவும் வேலூா் சிஎம்சி மருத்துவமனையின் இயக்குநா் விக்ரம் மேத்தியூஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, வேலூா் சிஎம்சி மருத்துவமனையின் இயக்குநா் விக்ரம் மேத்தியூஸ் வெளியிட்டுள்ளார்.
தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மத்திய சிறையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 கைதிகள் எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அதில் ஒரு கைதி அதிகபட்சமாக 500-க்கு 375 மதிப்பெண் பெற்றுள்ளார் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு அங்கமான 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு என்னும் நிகழ்ச்சி வேலூர் மாவட்டத்தில் வருகின்ற மே 15ஆம் தேதி அன்று வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (மே 11) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலுார் அடுக்கம்பாறை அரசு நர்சிங் பள்ளியில் உலக நர்சிங் தினவிழா நேற்று (மே 10) நடந்தது. இந்த விழாவிற்கு துணை கண்காணிப்பாளர் ரதிதிலகம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை இணை இயக்குநர் பாலசந்தர் கலந்துகொண்டார். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜவேலு, பள்ளி முதல்வர் உமா ராணி, துணை முதல்வர் ரகுபதி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வேலூர் பலவன்சாத்து குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன், இவரது மகன் கார்த்தி (15) ஓட்டேரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்துவந்தார். இவர் கடந்த 4ம் தேதி பைக்கில் விருபாட்சிபுரம் அருகே சென்றபோது அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த கார்த்திக்கை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
வேலூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் 242 பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 34 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியை பெற்றுள்ளனர். மாணவர்களை காட்டிலும் மாணவியர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மே.10) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 77.66% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 69 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 84.5 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் வேலூர் மாவட்டம் 38ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று (மே 10) அம்மனுக்கு சிறப்பு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் சார்பில் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 82.07% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 75.63% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 88.41% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.