India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவையில் விதி எண் 377-ன் கீழ் நேற்று நடந்த விவாதத்தில் வேலூர் எம்பி கதிர்ஆனந்த் பேசினார். அப்போது, “உதான் திட்டத்தின் கீழ் வேலுார் விமான நிலையத்தை விரிவுப்படுத்த கடந்த 2017-இல் 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முழுவீச்சில் பணிகள் தொடங்கின. ஆனால், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பயன்பாடுக்கு வரவில்லை. விமான நிலையத்தை உடனடியாக பயன்பாடுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரும் ஜூலை 4-ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுதாரர்கள் இந்த குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஜூலை 1) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 30) இரவு பலத்த மழை பெய்தது. பொன்னை பகுதியில் அதிகபட்சமாக 40.00 மி.மீ மழை பதிவானது. குடியாத்தம் 12.00 மி.மீ மழையும், காட்பாடி 18.50 மி.மீ, அணைக்கட்டு 3.00 மி.மீ, கே.வி.குப்பம் 7.00 மி.மீ, வேலூர் 13.20 மி.மீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 114.40 மி.மீ மழைப்பொழிவு பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (ஜூலை 1) நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளின் ஈமசடங்கிற்கான உதவித்தொகை காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று(ஜூலை 1) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டதில் வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு மற்றும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று(ஜூலை 1) சத்துவாச்சாரி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மண்டலக்குழுத் தலைவர் நரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு துணை தேர்வுகள் நாளை (ஜூலை 2) தொடங்க உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு 9 மையங்களும், பிளஸ் 1 துணைத் தேர்வுக்கு 12 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களுக்கு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலுார் மாவட்டத்தில் 5 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ உயிர்சத்து திரவம் வழங்கும் முகாம் இன்றூ ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை நடக்கும். இந்த முகாம் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் நடக்கிறது எனவும் மேலும், இதில் 95,633 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலுார் மாவட்டத்தில் 5 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ உயிர்சத்து திரவம் வழங்கும் முகாம் நாளை ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை நடக்கும். இந்த முகாம் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் நடக்கிறது எனவும் மேலும், இதில் 95,633 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் தொரப்பாடியில் உள்ள சிறை அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் (ஆப்கா) சிறை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று (ஜூன் 29) நடந்தது. இந்த விழாவிற்கு ஆப்கா இயக்குனர் பிரதீப் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா கலந்து கொண்டு பேசினார். இதில் பயிற்சி மைய பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.