Vellore

News April 4, 2025

வேலூர் மாவட்டத்தில் 2 பிடிஓக்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் 2 பிடிஓக்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்-1 பிடிஓ கார்த்திகேயன், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் பிடிஓ(வஊ) ஆகவும் அங்கு பணியில் இருந்த அமுதவல்லி மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம்-1 பிடிஓவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News April 4, 2025

வேலூர் மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

image

வேலூர் மாவட்ட ஆட்சியரகம்- 0416-2252501, பேரிடர் கால உதவி-1077, காவல் கட்டுப்பாட்டு அறை-100, வாட்ஸ் அப் எண்- 9092700100, தீத்தடுப்பு- 101, அவசர கால ஊர்தி உதவி- 102, விபத்துக்கால உதவி- 108, குழந்தைகள் உதவி- 1098, பாலியல் வன்கொடுமை தடுப்பு- 1091, பி.எஸ்.என்.எல் உதவி-1500, மாநில கட்டுப்பாட்டு அறை- 1070. *மிக முக்கிய எண்களான இவற்றை உங்களுக்கு தெரிந்த பெண்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் பகிரவும்.

News April 4, 2025

வேலூர் மாவட்ட சாய் பாபா கோயில்களில் சிறப்பு பூஜைகள்

image

வேலூர் மாவட்டத்தின் பள்ளிகொண்டா மற்றும் அரியூர் பகுதிகளில் உள்ள சாய் பாபா கோயில்களில் சிறப்பு பூஜைகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கூடிச் சாய் பாபாவிற்கு அன்னதானம், தீபாராதனை, சங்காபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளை நடத்தினர். ஹோமங்கள் மற்றும் விசேஷ ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களின் இறை பக்தி மற்றும் ஆன்மீக உற்சாகம் கோயில்களை மறுவாழ்வூட்டியது.

News April 4, 2025

குடியாத்தத்தில் ஏப்.11ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

image

குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் ஏப்.11ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. சிவில், மின்னணு, தகவல் தொழில்நுட்பம், வெல்டர், ஃபிட்டர், பிளம்பர் உள்ளிட்ட துறைகளில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். வேலைவாய்ப்பற்றவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

பைக் மோதி கூலித்தொழிலாளி பலி

image

வேலூர், சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (52). கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் (ஏப்.2) சேண்பாக்கம் அருகே உள்ள சர்வீஸ் சாலையை கடக்கும்போது பைக் ஒன்று அவர் மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 4, 2025

மினரல் வாட்டர் நிறுவனங்களில் ஆய்வு

image

கோடை காலத்தை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக 13 மினரல் வாட்டர் நிறுவனங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. கோடை காலம் முடியும் வரை தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்படும். இதில், விதிமீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார். இதுவரை 2 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

News April 4, 2025

வேலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று  இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News April 3, 2025

வியக்க வைக்கும் தமிழ்நாட்டின் பொற்கோயில்

image

பஞ்சாப்பில் சீக்கியர்கள் வழிபடும் பொற்கோவில் உள்ளதை போல தமிழ்நாட்டின் தங்கக்கோவிலாக வேலூரில் லட்சுமி நாராயணி கோயில் உள்ளது. முழுவதுமே தங்கத்தால் ஆன இந்த கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிளாக அறியப்படுகிறது. இங்குள்ள மகாமண்டபத்தில் நின்று லக்ஷ்மியை தரிசனம் செய்தால் பணக்கஷ்டம் நீங்கி 16 வகையான செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேலூர் மாவட்ட சிறப்பை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 3, 2025

வேலூரில் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு

image

பொது இடங்களில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், மதம், சாதிய அமைப்புகள், இதர அமைப்புகளின் கொடிக்கம்பங்களை உடனே அகற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இதை வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வரும் ஏப்.21-ஆம் தேதிக்குள் கோடி கம்பங்களை அகற்ற வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!