India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நாளை (ஜூன் 15) தேதி நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், புதிய குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
காட்பாடி எல்.ஜி.புதூர் சாலை கெங்கையம்மன் தெருவை சேர்ந்தவர் புஷ்பா. இவர் காட்பாடி-குடியாத்தம் சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தபோது இவரிடம் மர்ம ஆசாமி ஒருவர் பேச்சு கொடுத்து அவர் பையில் வைத்திருந்த 5 பவுன் நகையைத் திருடிச் சென்றுவிட்டார். இது குறித்த புகாரினபேரில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விழுந்தாகால் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை நேற்று கைதுசெய்தனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன் 13) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 1650 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 270 லிட்டர் கள்ளச்சாராயம், 66 மதுபாட்டில்கள், 100 கிராம் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 18 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (ஜூன் 13) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதில் இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) மலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கான சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள பயனாளிகள் மானியத்துடன் கடன் உதவி பெற www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஜூன் 13) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூன் 13) கே.வி.குப்பம் லத்தேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகளின் மூலம் ஆந்திர மாநிலத்திற்கு தினமும் ரேஷன் அரிசி 2 ஆயிரம் கிலோ முதல் 5 ஆயிரம் கிலோ வரை கடத்தப்படுவது தொடர்கதை ஆகின்றன. இவற்றை தடுக்க வேண்டிய நிர்வாகங்கள் கண்டும் காணாமல் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆண்டுதோறும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் ஜூன் 12ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 12) குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில் நேற்று (ஜூலை 12) வேலூர் மாவட்டம் தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ,மாணவியருக்கு, பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.