India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜுன்.19) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில் 10 லிட்டர் கள்ளச்சாராயம், 76 மதுபாட்டில்கள், 10 கிராம் கஞ்சா, 120 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் 15 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 17 சப் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று (ஜூன் 19) உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் கூடிய விரைவில் அந்தந்த காவல் நிலையங்கள் பொறுப்பேற்று கொள்வார்கள் என தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 40க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் 10, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூன் 17 ) கே.வி.குப்பத்தில் அதிகபட்சமாக 63.00 மி.மீ மழை பதிவானது. குடியாத்தம் 19.00 மி.மீ மழையும், காட்பாடி 59.00 மி.மீ, பொன்னை 36.00 மி.மீ, வேலூர் 33.20 மி.மீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 339.40 மி.மீ மழைப்பொழிவு பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஜூன் 21ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் தவறாமல் கலந்துகொள்ள வேண் டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, ஹான்ஸ், சாராயம் உள்ளிட்ட போதை பொருட்கள், மணல் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சமூக விரோத செயல்களுக்கு துணை போகும் காவல்துறையினர் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் ஜூன் 2024 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் பேர்ணாம்பட்டு வட்டம் ஏரிக்குத்தி கிராமத்தில் நாளை (ஜூன் 19) காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூரில் வீடுகளுக்கு மானியத்துடன் வழங்கப்படும் கேஸ் சிலிண்டர்கள் தவறுதலாக ஹோட்டல்களில் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து வட்ட வழங்கல் பறக்கும் படை அலுவலர்கள் பாபு ராவ், தீவிர சோதனை மேற்கொண்டதில் ஹோட்டல்களில் பயன்படுத்தப்பட்ட 10-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிலிண்டர்கள், உரிமம் பெற்ற இந்தியன் கேஸ் ஏஜென்சி இடம் ஒப்படைக்கப்பட்டன.
வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த வேலூர் துணைமின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இன்று (ஜூன் 18) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களுக்காக மறுதேதி குறிப்பிடப்படாமல் மின்நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வேலூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.
வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த வேலூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நாளை ஜூன் 18ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களுக்காக மறு தேதி குறிப்பிடப்படாமல் மின்நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வேலூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.