India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒடுக்கத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 84 மாணவர்கள் வரை பயின்று வரும் சூழலில் போதிய ஆசியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், போதிய ஆசிரியர்களை நியமிக்க கோரியும் பெற்றோர்கள், மாணவர்கள் என சுமார் 50 பேர் இன்று பள்ளிக்கு முன் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பங்குப்பம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.
வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி. இவர் மேட்டூர் நகராட்சிக்கும், 3வது மண்டலத்தில் பணியாற்றி வந்த உதவி பொறியாளர் வெங்கடேசன், தஞ்சாவூர் நகராட்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2 பேரையும் பணியிடமாற்றம் செய்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி இன்று (ஜூன் 21) அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணைக்கட்டு அடுத்த அத்தியூர் முதல் கொல்லைமேடு வரை 1.04 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ. 1.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையில் அமைந்துள்ள சிறுபாலத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (21.06.2024) ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எழிலரசி, கார்த்திகேயன் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் இன்று (ஜூன் 20)அ நடத்தப்பட்ட சோதனையில் 2400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 667 லிட்டர் கள்ளச்சாராயம், 431 மது பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 65 பேர் மீது கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 50 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தகவலை காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று( ஜூன் 20) பார் அசோசியேஷன் தலைவர் அண்ணாமலை தலைமையில் புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர்கள் விஜயகுமார், காஞ்சனா, பாலசந்தர் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டு வரை மாவட்டம் முழுவதும் 3,82, 475 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 64,482 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இது தொடர்பாக 5,656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் 52 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் விற்பனை குறித்து புகார் தெரிவிக்க எஸ்.பி மணிவண்ணன் நேரடி கட்டுபாட்டில் இயங்கும் வாட்ஸ் ஆப் எண் 6379958321 எண்ணிற்கு புகர் தெரிவிக்கலாம். இதே போல் வேலூர் மதுவிலக்கு போலீசார் 8838608868 மற்றும் குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் 9087756223 என்ற வாட்ஸ் ஆப் எண் புகார் தெரிவிக்கலாம் என எஸ்.பி மணிவண்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளச்சாராய இறப்புகள் தொடர்பான பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் நேற்றிரவு (ஜூன் 19) 3 காவல் ஆய்வாளர்களின் தலைமையில் 7 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 60 காவலர்கள் என மொத்தமாக 70 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட அனுப்பி வைக்கப்பட்டனர் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா (45) இவரை கடந்த மாதம் 16ம் தேதி சாராயம் விற்ற வழக்கில் போலீசார் கைது செய்து பெண்கள் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் சுகுணாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சுகுணாவை கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று உத்தரவிட்டார்.
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் விஜய் தலைமையில் அதிகாரிகள் நேற்று (ஜூன்.19) இரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் கணக்கில் வராத ரூ. 2.14 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பத்திரம் பதிவு அதிகாரிகள் மற்றும் உள்ளிருந்த நபர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.