India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் காட்பாடி அக்சிலியம் மகளிர் கலைக் கல்லூரி கூட்டரங்கத்தில் பேரவை தொடக்க விழாவில் தமிழ்த்துறை எழுதிய “பசுமைப் பெண்கள்” என்னும் புத்தகத்தின் முதல் பிரதியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வெளியிட கல்லூரிச் செயலர் மேரி, ஜோஸ்பின் ராணி ஆகியோர் பெற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அமலா வளர்மதி, உதவிப்பேராசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தன்னார்வத் தொண்டு நிறுவுவதற்கான விளக்கக் கூட்டம் ஹோட்டல் ராயல் கிராண்டில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (ஜூலை 12) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) நாகராஜன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காட்பாடியில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றிவருகிறார் . ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதை தடுக்க அரசு சட்ட முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. எனவே பாலாற்றில் தடுப்பணை கட்டுவது நடக்காத காரியம் என்றார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 120 லி கள்ளச்சாராயம், 47 மதுபாட்டில்கள், 100 லி கள்ளச்சாராய ஊரல்கள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டு ஒரேநாளில் 14 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக எஸ்பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராய விவகாரம் ஆளும் அரசுக்கு தலைவலியாக மாறியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஜூலை 11) சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 120 லிட்டர் கள்ளச்சாராயம், 47 மதுபாட்டில்கள் மற்றும் 100 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 14 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அண்ணா கலையரங்கம் அருகே இன்று (ஜூலை 11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 10) இரவு பலத்த மழை பெய்தது. காட்பாடி பகுதியில் அதிகபட்சமாக 42.60 மிமீ மழை பதிவானது. குடியாத்தம் 9.10 மிமீ மழையும், காட்பாடி ரயில் நிலையம் 38 மிமீ, கே.வி.குப்பம் 20 மிமீ, வேலூர் 21.90 மிமீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 167.80 மிமீ மழைப்பொழிவு பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் முழுவதும்போலீசார் நேற்று (ஜூலை 10) நடத்திய சோதனையில் 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. மேலும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார். தற்போது சாராய பிரச்சனை அரசுக்கு தலைவலியாக மாறியுள்ள நிலையில் மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஜூலை 11-ம் தேதி காலை 11:30 மணியளவில் தொலைந்த/திருடுபோன செல்போன்கள் செல் ட்ராக்கர் மற்றும் CEIR போர்டல் மூலம் மீட்கப்பட்ட 170 செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்க உள்ளார் என காவல் துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 10) தெரிவித்தனர்.
வேலூர் CMC மருத்துவமனை புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், Medical Lab Technician, AHS Medical Lab Technician போன்ற பணிக்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு B.Sc/ DMLT என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் <
Sorry, no posts matched your criteria.