Vellore

News July 16, 2024

வேலூர் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

முன்னாள் முதல்வர் கலைஞர், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் பேச்சு போட்டி நடைபெற உள்ளது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 16) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

வேலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று (16-07-2024) இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <>ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 16, 2024

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் சபதம்!

image

வேலூர் மாவட்டம் பிரம்மபுத்திரம் தனியார் மண்டபத்தில் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், நான் எங்கிருந்தாலும் காட்பாடி மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்றார். மேலும் தமிழ்நாட்டின் முதன்மைத் தொகுதியாக காட்பாடியை மாற்றிக் காட்டுவேன் என்று சபதம் செய்தார்.

News July 15, 2024

வேலூர் மாவட்டத்தில் நுழைந்த ஒற்றை யானை

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றித்திரிந்த ஒற்றை தந்தம் கொண்ட யானை இன்று (ஜூலை 15) வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா உட்பட்ட ஒடுக்கத்தூர் பகுதியில் நுழைந்துள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து யானையை கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News July 15, 2024

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை பெற்ற டிஆர்ஓ

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (ஜூலை 15) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நல அலுவலர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

வேலூர்: காலை உணவு திட்டம் இன்று தொடக்கம்

image

வேலூர் மாவட்டத்தில் 70 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 2,907 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு இன்று (ஜூலை 15) முதல் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 1,451 மாணவர்கள், 1,456 மாணவிகள் என்று மொத்தம் 2,907 பேர் பயன்பெற உள்ளனர். அனைத்து பள்ளி நாட்களிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.

News July 14, 2024

வேலூர்: ஒரே நாளில் 15 பேர் மீது வழக்கு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 14) நடத்திய சோதனையில் 5 லிட்டர் கள்ளச்சாராயம், 200 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 3 லிட்டர் கள், 15 மதுபாட்டில்கள், 250 கிராம் குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு  15 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்

News July 14, 2024

வேலூரில் நாளை முதல் விரிவாக்கம்

image

தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தில் வேலுார் மாவட்டத்தில் ஏற்கனவே 658 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 36 ஆயிரத்து 996 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இப்போது நாளை (ஜூலை 15) முதல் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த குழந்தைகளும் பயன்பெற உள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 2907 பேர் இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெற உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News July 14, 2024

வேலூர் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 13) நடத்திய சோதனையில் 5 லிட்டர் கள்ளச்சாராயம், 2 லிட்டர் கள், 68 மதுபாட்டில்கள், 140 கிராம் குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 20 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!