Vellore

News July 19, 2024

வேலூர் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த கலெக்டர்

image

வேலூர் கொசப்பேட்டை ஈ.வெ.ரா நாகம்மையார் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 2.97 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 14 புதிய வகுப்பறை கட்டிடத்தை வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 19) குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா,  துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் வேலூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

News July 19, 2024

வேலூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

சென்னை வானிலை ஆய்வு மையம் வேலூர் மாவட்டத்தில் அடுத்து 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில், மிதமான மழை செய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 19, 2024

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 18) நடத்திய சோதனையில் 22 மதுபாட்டில்கள், 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 8 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்  எச்சரித்துள்ளார்.

News July 18, 2024

வேலூர் எஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (ஜூலை 18 ) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆய்வகங்களில் ஆராய்சிக்காக/பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் மெத்தனால் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மெத்தனால் கையிருப்பு, பயன்பாடு ஆகியவை முறையே பதிவு செய்யப்பட வேண்டும், எக்காரணம் கொண்டும் ஆய்வக பயன்பாட்டை தவிர இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என  ஆலோசிக்கப்பட்டது

News July 18, 2024

வேலூர் காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மாபெரும் இலவச மருத்துவ முகாம் வரும் ஜூலை 20-ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை கோட்டை சுற்று சாலையில் உள்ள காவலர் நல்வாழ்வு மன்றத்தில் நடைபெற உள்ளது. எனவே காவலர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

வேலூர் மாங்காய் மண்டி எதிரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் பாதாள சாக்கடை பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து இன்று (ஜூலை 18) அந்த இடத்திற்கு கலெக்டர் சுப்புலெட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

News July 18, 2024

வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு: ஒருவர் கைது

image

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (43). இவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சுப்பிரமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி வேலூர் எஸ்பி மணிவண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுப்பிரமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சுப்புலெட்சுமி நேற்று (ஜூலை 17) உத்தரவிட்டார்.

News July 18, 2024

வேலூர் மாவட்டத்திற்கு 1,000 டன் நெல் முட்டைகள் வருகை

image

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு 1,000 டன் நெல் மூட்டைகள் நேற்று (ஜூலை 17) காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்த நெல் மூட்டைகள், லாரிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள வாணிப நுகர்பொருள் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. பின்னர் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!