India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வருகிற ஜூலை 26-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக வழங்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 24) வெயில் அளவு சற்று குறைந்து 93°F டிகிரி பாரன்ஹீட் ஆக பதிவானது. மேலும் வேலூரில் காலை முதல் வானம் மழை மேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது ஒரு சில இடங்களில் சிறு சாரல் மழையும் பெய்தது. குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஜூலை 26-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலை இல்லாத இளைஞர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 24) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று (ஜூலை24) நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் 25 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். கூட்டத்தில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் உட்பட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வன்னியர்களின் எதிர்காலம் விளையாட்டா என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு பரிந்துரைக்க மேலும் ஓராண்டா எனக் கேட்டுள்ள ராமதாஸ், வன்னியர்களுக்கான சமூகநீதியை பெற்றுத்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
காட்பாடியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் பேஸ்புக்கில் ஆன்லைனில் பகுதி நேர வேலை உள்ளதாக லிங்க் வந்துள்ளது. அந்த லிங்க்கில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் கட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி, ரூ.4 லட்சம் பணத்தை செலுத்தி உள்ளார். ஆனால் கட்டிய பணத்தை திருப்பி எடுக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அவர் வேலூர் சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் 33 பேரின் வங்கி கணக்குகளை முடக்கி அதில் ரூபாய் 24,949/- பணம் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஜூலை 23) நடத்திய சோதனையில் 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
காட்பாடி அடுத்த வள்ளிமலை கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை 23) காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்பாடி, வள்ளிமலை, பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு ஆகிய ஊராட்சிகளை சார்ந்த பொதுமக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் சுப்புலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ராமு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.