Vellore

News August 5, 2024

புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்

image

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 22 புதிய பேருந்துகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஆகஸ்ட் 5) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 5, 2024

வேலூர் திறனாய்வு தேர்வில் 369 பேர் ஆப்சென்ட் 

image

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வேலூர் மாவட்டத்தில் நேற்று(ஆகஸ்ட் 4) நடந்தது. இந்த தேர்வை எழுத வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 2732 மாணவ, மாணவிகள் வின்னப்பித்தனர் . இதில் 2363 மாணவர்கள் தேர்வு எழுதினர். மீதமுள்ள 369 பேர் தேர்வு எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 5, 2024

வேலூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி வரை வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2024

வேலூரில் புதிய பேருந்துகளை தொடங்கி வைக்கிறார் அமைச்சர்

image

வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை 10 மணியளவில் (ஆகஸ்ட் 5) 22 புதிய பேருந்துகளை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதில், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொள்கின்றனர்.

News August 5, 2024

வேலூரில் 22 புதிய பேருந்துகளை தொடங்கி வைக்கிறார் அமைச்சர்

image

வேலூர் மாவட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை 10 மணியளவில் (ஆகஸ்ட் 5) 22 புதிய பேருந்துகளை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதில், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

News August 4, 2024

வேலூர் மாவட்டத்தில் திடீரென அதிகரித்த வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 4) 101.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. பகல் நேரத்தில் வெயிலுடன் சேர்ந்து அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். ஆனால் தற்போது மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

News August 4, 2024

வேலூரில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இன்று மழை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் இன்று வரை 51% கூடுதல் மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்துள்ளது.

News August 4, 2024

வேலூரில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு

image

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வேலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் இன்று நடைபெற்றது. இதில், 2732 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இத்தேர்வில் மாநிலம் முழுவதும் வெற்றிபெறும் 1000 பேருக்கு ஆண்டுக்கு ரூபாய் 10,000 வீதம் அவர்கள் இளநிலை பட்டப்படிப்பு முடியும் வரை உதவி தொகையாக வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 4, 2024

வேலூர் சரகத்திற்கு புதிய டி.ஐ.ஜி நியமனம்

image

17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஐ.பி.எஸ். அதிகாரி என். தேவராணி மீனா வேலூர் சரக டி.ஐ.ஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வேலூர் டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த சரோஜ் குமார் தாக்கூர் சென்னை பெருநகர கிழக்கு இணை ஆனையராக மாற்றப்பட்டுள்ளார்.

News August 4, 2024

தண்ணீரை காய்ச்சி குடிக்க கலெக்டர் வேண்டுகோள்

image

பெங்களூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மழைநீர் மண் கலந்து கலங்கலாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணையின் பகுதிகளுக்கு வந்து கொண்டிருக்கிறது. எனவே காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் குடிநீரினை பொதுமக்கள் நன்கு காய்ச்சி கொதிக்க வைத்து பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். இதனால் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!