India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தின் உத்திர காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக உத்திர காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று குடியாத்தம், காட்பாடி, அணைக்கட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தத்தால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா?
வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 12) வேலூர் கோட்டை காந்தி சிலை அருகில் தொடங்கி வைத்து பங்கேற்றார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, வேலூர் வட்டாட்சியர் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் பிடிஓக்கள் 3 பேர், துணை பிடிஓக்கள் 27 பேர் என 30 பேரை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஆகஸ்ட் 11) உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட பிடிஓ வின்சென்ட் ரமேஷ்பாபு, வேலூர் ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சிகள் பிடிஓவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 30 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் கன்டோன்மென்ட்- காட்பாடி இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடப்பதால் அரக்கோணத்தில் இருந்து காலை 7:20 மணிக்கு புறப்படும் வேலூர் கன்டோன்மென்ட் மெமு ரயில் இன்று 12ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. மறுமார்க்கத்தில் வேலூர் கன்டோன்மென்ட் – அரக்கோணம் மெமு ரயில் காட்பாடியில் இருந்து காலை 10.20 மணிக்கு அரக்கோணம் புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அரிமலை கிராமத்தில் ஜெயகுமார் என்பவரது மோட்டார் பைக் இன்று (ஆகஸ்ட் 11) திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து அவர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடும் நேரம் நாளை (ஆகஸ்ட் 12) முதல் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். தேசிய விடுமுறை நாட்கள், இரண்டாம் சனிக்கிழமை, பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை நாட்கள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு இன்று (ஆகஸ்ட் 11) மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலையும் சற்று குறைந்தது. பெரிய வஞ்சரம் மீன் ரூ. 1200, சிறிய வஞ்சரம் மீன் ரூ.800, இறால் ரூ. 450 முதல் 550, கட்லா ரூ. 160, நண்டு ரூ. 450 முதல் 500, மத்தி ரூ. 200 முதல் 300 வரை என மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.
வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரன் கோயிலில் இன்று (ஆகஸ்ட் 11) சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் முனீஸ்வரரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஆராதனை காட்டப்பட்டது. மேலும், மதியம் 12 மணியளவில் உச்சி கால பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று மின்னஞ்சல் மூலம் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் மருத்துவமனைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.