India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் முதுகலை கலை மற்றும் வணிகவியல் (எம்.ஏ, எம். காம்) பாடப்பிரிவுகளிலும், எம்.எஸ்சி அறிவியல், எம்.எஸ்சி கணினி அறிவியல் பாடப்பிரிவுகளிலும் 240 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வில் சான்றிதழ் சரிபார்ப்புப்பணி இன்று (ஆகஸ்ட் 14) காலை 9.30 மணியளவில் அந்தந்த துறைகளில் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கட்டு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இந்நிலையில் முதியோர் உதவித்தொகை பெறும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடையாது என அதிகாரிகள் கூறியதால், நிலத்தில் இறங்கி நெற் பயிர்களை கட்டி அணைத்து ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூரில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வேலூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவர் பட்டியில் இனத்தை சேர்ந்தவர் என்று போலியான சான்றிதழ் மூலம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே, போலிச் சான்றிதழ் மூலம் வெற்றி பெற்றார் என்பது உறுதியான நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும்,அவர் மீது தாலுகா காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பரவக்கல், மொரசப்பள்ளி, தொழிற்சாலைமீனூர், மொரசப்பள்ளி,நல்லங்கநல்லூர், ஏர்த்தகல், செர்லப்பள்ளி, உப்பரப்பள்ளி முக்குன்றம், , தட்டப்பாறை, ஆம்பூர்,சான்றோர்குப்பம், தோல் தொழிற்சாலை, ஆலங்குப்பம், சோமலாபுரம், எம்சி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், கணியம்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. அணைக்கட்டு வட்டத்தில் அதிகளவு நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று இரவு இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 1 மணி வரை வேலூர் மாவட்டத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் ஒட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
நடப்பாண்டில் இந்தியாவிலேயே தலைச்சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழங்கள் பட்டியலில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் 10ஆவது இடத்தை பிடித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.