India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் அணைக்கட்டு தாலுகா கழனிப்பாக்கம் கிராமத்தில் வரும் 18-ம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற இருந்தது. தற்போது தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களுக்காக செப்டம்பர் 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர் எனவே வேலை தேடுபவர்கள் இந்த கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் 353 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக் கொண்டார் . மனுக்கள் மீது துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (செப்டம்பர் 16) மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியை அரசு அலுவலர்கள் எடுத்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்தையன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியது மற்றும் நகை திருடியதாக தாக்கிய வழக்கில் தொடர்புடைய ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாவலர் ராஜூ உள்பட 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் இவர்கள் இன்று காலை 11 மணியளவில் சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர்.
வேலூர் எஸ்பி மதிவாணன் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டம் முழுவதும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சரித்திர பதிவேடு ரவுடிகளை கண்காணித்து வருகின்றனர். இதில் கடந்த 3 நாட்களில் 382 ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வேலூர்- பெங்களூர் சாலையில், டவுன் ரயில் நிலையம் உள்ளது. இங்குள்ள ரயில்வே கேட் அருகே, வேகத்தடை அமைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இன்று (செப்.16) இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை ரயில்வே கேட் மூடப்பட உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மாற்று பாதையில் பயணம் செய்து கொள்ள கலெக்டர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார்.
வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், “2021ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பதவி காலம் 2026 அக்டோபர் 19ஆம் தேதி முடிவடைகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று செப்டம்பர்-15 இரவு காவல்துறை காவல் ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதியில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்-9486370239
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த நாவல் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை நேற்று வழக்கம் போல் விற்பனையாளர் திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையின் பின்புற சுவர் துளையிடப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது 1 லட்சம் மதிப்புள்ள 600 மதுபாட்டில்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.