India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நாளை (ஆகஸ்ட் 20) வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று முன்னேற்பாடு பணிகளை வேலூர் டிஐஜி தேவராணி, எஸ்பி மதிவாணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டத்தின் கீழ் மானியம் பெற அனைத்து வீட்டு மின் இணைப்பு நுகர்வோர்கள், வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்கள் கூடுதல் ஆவணங்களின்றி மின்கட்டண ரசீது மட்டும் பதிவேற்றம் செய்து இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு www.pmsuryaghar.gov.in, www.solarrooftop.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் கூறியுள்ளார்.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் 2023-ம் ஆண்டு நடந்த இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர், சிறைக்காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,202 பேருக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை டிஐஜி தேவராணி, எஸ்பி. மதிவாணன் ஆகியோர் தலைமையில் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு ஆகியவை நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. MRF நிறுவனம், தணிகைபோளூர், இச்சிபுத்தூர், உப்புப்பேட்டை, தாஜ்புரா, மேலக்குப்பம், தூப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விசாரம், நந்தியாலம், ரத்தினகிரி, மேலக்குப்பம், ஆற்காடு, மேல்பாடி, திருவலம், வள்ளிமலை, பூடுதாக்கு, கீழ்மின்னல், பிரம்மாபுரம், பெருமுகை, அரப்பாக்கம், காரணம்புட் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 18) நடத்திய சோதனையில் 104 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24- ல் மாநில அரசின் விருது பெற சிறந்த சேவை மற்றும் வீரதீர செயல் புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் பாராட்டு பத்திரம் மற்றும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்படும். எனவே தகுதியானவர்கள் (http://awards.tn.gov.in) என்ற இணையதள பக்கத்தின் வாயிலாக 30.09.2024க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 17) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 41 மதுபாட்டில்கள், 4 கிலோ தடை செய்யப்பட்ட கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பெற கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் மூன்று நாட்கள் நடைபெறுவதாகவும், பொதுமக்கள் புதிய விண்ணப்பங்கள் அளிக்கலாம் என வாட்ஸ் அப் மூலம் பரப்பும் தகவல்கள் உண்மைக்கு மாறானது. எனவே, இச்செய்தியை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஆகஸ்ட் 17) அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆவனி மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அரசு போக்குவரத்து கழக வேலூர் மண்டலத்தில் இருந்து 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூரில் இருந்து 50 பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 30 பேருந்துகளும், ஆற்காடில் இருந்து 20 பேருந்துகளும் நாளை 18, 19ஆம் தேதி வரை இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.