India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து வரும் ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த கண்காட்சி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடத்த உள்ளது. எனவே இதில் 30-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, 31-ம் தேதி திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து வரும் ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த கண்காட்சி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே இதில் 30-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, 31-ம் தேதி திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் இன்று (ஆகஸ்ட் 28) மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 26) இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை காவல் ஆய்வாளர் (நாகராஜன்) தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம், அரியூர், வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதியில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்-9498109959
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் நாளை (ஆகஸ்ட் 29) செல் ட்ராக்கர் மற்றும் CEIR போர்டல் மூலம் மீட்கப்பட்ட 232 தொலைந்த/களவுபோன செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உரியவர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக மாவட்ட காவல்துறையின் சார்பில் இன்று (ஆகஸ்ட் 28) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் நேற்று (ஆகஸ்ட் 27) முதல் இரவு 11 மணிக்கு மேல் கட்டாயம் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் அறிவித்துள்ளார். இதற்காக ஏ பி சி என மூன்று குழுக்களை அமைத்து இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் சுற்றும் இளைஞர்களை,அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்ப வேண்டும்
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் ஆர்.கோபிநாத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ளார். இவருக்கு செப் 5 ஆம் தேதி டெல்லியில் நல்லாசிரியர் விருது மற்றும் வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட உள்ளது. மேலும், ஆசிரியர் கோபிநாத்க்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால், வேலூரைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் வெளியே செல்லும்போது குடை, ரெயின் கோர்ட்டுடன் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?
வேலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பள்ளிக் கல்வித்துறையின் மாதந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நேற்று (27.08.2024) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி கல்வி துறை சம்மந்தமான கோரிக்கைகள் கேட்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்
வேலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பள்ளிக் கல்வித்துறையின் மாதந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நேற்று (27.08.2024) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி கல்வி துறை சம்மந்தமான கோரிக்கைகள் கேட்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Sorry, no posts matched your criteria.