India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கிவரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் அமைப்பின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலான பணிகளில் துணை தலைமை சட்ட உதவி வழக்கறிஞர், உதவி சட்ட உதவி வழக்கறிஞர், அலுவலக உதவியாளர், எழுத்தர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் ஆகிய மொத்தம் 9 பணியிடங்களுக்கு http://districts.ecourts.gov.in/vellore என்ற இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வேலூர் முத்துரங்கம் அரசுக்கல்லூரியில் நேற்று நடந்தது. இந்த முகாமில் 1,423 பேர் கலந்து கொண்டனர். இதில் 257 பேர் நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
பேரணாம்பட்டு அருகே பத்தலப்பள்ளி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக பதிவெண் கொண்ட வாகனத்தை சோதனை செய்தததில் 4 டன் ரேஷன் அரிசியை ராணிபேட்டை மாவட்டத்திலிருந்து கே.ஜி.எப் க்கு கடத்தியது தெரிய வந்தது. எனவே ரேஷன் அரிசி கடத்தியதாக கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வேன் டிரைவர் வருண் ( 21), சரண் (21), விஜய் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஆகஸ்ட் 31) நடத்திய சோதனையில் 64 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
வேலூர் கோட்டை சுற்றுவட்ட சாலையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று (31.08.2024) பார்வையிட்டு ஆய்வு செய்து, விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் விடுதியில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாநகராட்சி உதவி பொறியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானம் அருகே முன்னாள் சென்ற லாரியை இருசக்கர வாகனத்தில் முந்தி செல்ல முயன்ற வாலிபர் லாரியின் டயரில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்பது தெரிய வந்தது.
ராணிப்பேட்டை நெமிலி காவல் நிலைய பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு அஜித்குமார் (22) கொலை செய்யப்பட்ட வழக்கு சத்துவாச்சாரி எஸ்சி/எஸ்டி சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் வத்தியூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு(24), சந்தானம்(24), ராமமூர்த்தி(20), சிவா(23), அஜித்குமார்(23), ராஜசேகர்(23), பரசுராமன் (26) ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.
வேலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாடியில் தோட்டம் அமைப்பவர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் விதைத்தொகுப்பு வழங்கப்படுகிறது. ரூ.450 மதிப்பிலான விதைத்தொகுப்பை கடந்த 4 நாட்களில் 105 பேர் வாங்கி சென்றுள்ளனர். எனவே இதை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் நேற்று (ஆகஸ்ட் 30) மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 66 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (30.08.2024) வேலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி கடன் உதவி வழங்குவது தொடர்பாக வங்கி மேலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜமால் மொய்தீன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.