India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் சிறு, குறு தொழில்நிறுவன வளர்ச்சி வங்கி சார்பில் தொழில் முனைவோருக்கான ஆலோசனை கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் சுப்புலெட்சுமி தமிழ்நாடு அரசின் சார்பில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மத்திய மாநில அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
வேலூர் மாவட்டத்தில் TNPSC குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ முதல் நிலை எழுத்து தேர்வு வரும் 14-ம் தேதி 48 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை 13 ஆயிரத்து 139 பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுத வருவோர் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறைக்கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாக வேலூர் டிஐஜி மீது சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், சென்னை சரக டிஐஜி முருகேசன் வேலூர் சரக டிஐஜியாக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை சிறைக் காவலர்கள் தாக்கியது தொடர்பான வழக்கில் சென்னை சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 12) மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை புழல் சிறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகனிடம் தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் சேர மத்திய அரசு வலியுறுத்துவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, இரு மொழி கொள்கையை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது. மாற்று மொழி வந்தால் தமிழ் மொழி அழியும் என்று சொன்னவர் அண்ணா. இதில் நாங்கள் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் வேறு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலத்தில் மின்னணு குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் ஆகியோர் eShram என்ற வலைதளத்தில் பதிவு செய்து பொது விநியோக திட்டத்தின் அட்டையை பெற்று கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வட்ட வழங்கல் அலுவலகத்தினை அணுகி தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். துரைமுருகன் வீடு மற்றும் அவரது உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் 11.55 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் எம்.பி கதிர் ஆனந்த் இன்று ( செப் 12 ) வேலூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் விமான போக்குவரத்து ஆணைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் நேற்று (செப்.11) ஆய்வு செய்தனர். மேலும், விமான நிலையத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டி உள்ளது எனவும், விமான நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். மேலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்க மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (செப்டம்பர் 11) நடத்திய சோதனையில் 53 மதுபாட்டில்கள் மற்றும் 150 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் (செப்டம்பர் 14) தேதி நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், புதிய குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.