Vellore

News September 17, 2024

வேலூர் மாவட்ட ஆட்சியர் மிலாடி நபி வாழ்த்து செய்தி

image

இறைத்தூதர் முஹம்மது நபிகள் நாயகம் பிறந்த நாள் அனைவராலும் மிலாடி நபியாக கொண்டாடப்படுகிறது. சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்கு துணையாக இருக்கும்போது எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கை அனைவரின் மனதிலும் விதைத்தவர் நபிகளார். மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News September 17, 2024

வேலூருக்கு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு வருகை

image

வேலூர் மாவட்டத்திற்கு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு வரும் 19ம் தேதி வரவுள்ளனர். இந்த குழுவானது காலை 9.30 மணிக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் வேலூர் சுற்றுலா மாளிகையில் கூடி நிறுவனம், வாரியம், கழகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து குழுவால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News September 17, 2024

வேலூர் சிறை காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

image

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியது மற்றும் நகை திருடியதாக தாக்கிய வழக்கில் தொடர்புடைய ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாவலர் ராஜூ, போலீசார்கள் பிரசாந்த், விஜி ஆகிய பேருக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் இவர்கள் நேற்று சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

News September 17, 2024

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி முற்றுகை 460 பேர் கைது

image

சுங்கச்சாவடி கட்டண கொள்ளையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்துக்கு த.மு.மு.க. மாநில செயலாளர் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 460 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலை 6 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டனர்.

News September 17, 2024

வேலூர் மாவட்டத்தில் 7 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் 7 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். பேர்ணாம்பட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி, வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நேர்முக உதவியாளராகவும், அங்கு பணியாற்றிய மெர்லின் ஜோதிகா குடியாத்தம் தாசில்தராகவும், குடியாத்தத்தில் பணியாற்றிய சித்ரா தேவி, கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராகவும் (நடுவர் தீர்ப்பாயம்) இவர்கள் உள்பட 7 பேர் பணியிட மாற்றும் செய்யப்பட்டுள்ளனர்

News September 16, 2024

போக்சோ வழக்கு கைதி செய்யப்பட்டவர் மாரடைப்பால் பலி

image

பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அனீஸ்அகமது (42). இவர் பெற்ற மகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது இதையடுத்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

News September 16, 2024

மனுநீதி நாள் முகாம் தேதி மாற்றம் கலெக்டர் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் அணைக்கட்டு தாலுகா  கழனிப்பாக்கம் கிராமத்தில் வரும் 18-ம் தேதி  மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற இருந்தது. தற்போது தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களுக்காக செப்டம்பர் 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News September 16, 2024

வேலூரில் செப்.20 ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

image

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்  நடைபெற உள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர் எனவே வேலை தேடுபவர்கள் இந்த கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News September 16, 2024

பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 353 மனுக்கள் பெறப்பட்டது

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் 353 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக் கொண்டார் . மனுக்கள் மீது துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

News September 16, 2024

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி

image

தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  இன்று (செப்டம்பர் 16) மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியை அரசு அலுவலர்கள் எடுத்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  முத்தையன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!