India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெங்களூருவில் இருந்து ரேஷன் அரிசி ஏற்றிக்கொண்டு வேலூருக்கு லாரி ஒன்று வந்தது. நேற்று ஒடுக்கத்தூர் அருகே சென்றுகொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர், கிளீனர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் லாரியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக அணைக்கட்டு அடுத்த புலிமேடு வனப்பகுதியில் உள்ள அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் இங்கு குளிக்க வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உதவி வனப்பாதுகாவலர் மணிவண்ணன் தலைமையிலான வனத்துறையினர் அதிகளவில் கொட்டும் அருவி நீரில் குளிக்க வேண்டாம் என்று விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் இயங்கி வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில், அரசு அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலமாக போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ரகசிய தகவல்கள் தருவதாக கூறி கமிஷன் பணத்தைக் கேட்டு ஏமாற்றி வந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவை சார்ந்த தாவூத் இப்ராஹிம் என்பவர், சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரஜினிகுமார் தலைமையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியும், காட்பாடி சன்பீம் சிபிஎஸ்இ பள்ளியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியின் கிளையை காட்பாடி சன்பீம் பள்ளி வளாகத்தில் நாளை 28-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த அகாடமியை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் திறந்து வைக்கிறார் என சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தெரிவித்துள்ளார்.
வேலூர் லாங்கு பஜாரில் உள்ள பட்டாசு கடைகளில் அமெரிக்கன் ரெட், பார்பி பவுண்டைன், பியூட்டி, பீஸ்ட், துரந்தோ 60, பிளவர்-4, ஐபிஎஸ் ஷவர்ஸ், என பல வகையான புதிய ரக பட்டாசுகள் விற்பனை களைக்கட்டியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் புதிய ரக பட்டாசு மற்றும் புத்தாடை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒடுகத்தூர் அடுத்த டி.சி.குப்பம் சேர்ந்த ஜோதி- வேலு தாமதிக்கு 2 வயதில் வருண் கீர்த்திக் என்ற மகன் உள்ளார். நேற்று வருண் கீர்த்திக் வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று (அக்.27) தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்திருந்தார். எனவே, வேலூர் மாவட்டத்தில் மக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரத்தை சேர்ந்தவர் உதயகுமார் (53). பேர்ணாம்பட்டு அடுத்த பாஸ்மார் பெண்டா மலை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ளார். மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் நேற்று போக்சோவில் கீழ் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ்இ தேர்வு (ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு) 6 மையங்களில் நேற்று நடைபெற்றது. தேர்வினை 1764 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். நேற்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 2 பிரிவுகளாக தேர்வு நடந்தது. இத்தேர்வினை 845 பேர் எழுதினர், 919 பேர் எழுதவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி நேற்று (அக்டோபர் 26) அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சியில் அமைந்துள்ள இந்திய செஞ்சிலுவை சங்க முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோருக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.