Vellore

News October 15, 2024

வேலூர் காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில், மழை தொடர்பான தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் : 0416 2256802 மற்றும் 94981 81231 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. துணை காவல் கண்காணிப்பாளர் இருதயராஜ், காவல் ஆய்வாளர் பாபு ரவிச்சந்திரன் மாவட்டம் முழுவதும் 60 பேர் கொண்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

வேலூர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

image

மழைக்காலங்களில் வாகனங்களை இயக்கும்போது பின்பற்ற வேண்டியவை வேலூர் மாவட்ட காவல்துறை நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரிய செய்யவும்,வாகனத்தின் வேகத்தினை குறைக்கவும்,வாகனங்களுக்கு இடையே இடைவெளி விட்டு செல்லவும், சாலையில் உள்ள வேகத்தடைகள் மற்றும் பள்ளங்களை கவனித்து கடக்கவும். சாலையோர பாதசாரிகள் கவனித்து செல்லவும்.
சாலை விதிகளை பின்பற்றுவீர் பாதுகாப்பான பயணத்தை உறுதி

News October 15, 2024

வேலூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டி

image

வேலூர் மாவட்டத்தில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கலெக்டரிடம் நிருபர்கள் கேட்டதற்கு இந்திய வானிலை அறிக்கையை பொறுத்து முடிவெடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக வேலூர் மண்டலத்தில் இருந்து அக்டோபர் 16,17 ஆகிய தேதிகளில் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி வேலூரில் இருந்து 50 பேருந்துகளும் திருப்பத்தூரில் இருந்து 30 பேருந்துகளும் ஆற்காடு இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவித்தனர்.

News October 15, 2024

மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

image

வேலூரில் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் மழை தொடர்பான புகார்களை தொலைபேசி எண் 0416 – 2258016, கட்டணமில்லா எண் 1077, வாட்ஸ் அப் எண் 9384056214 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 15, 2024

வேலூர் மக்களுக்கு தொடர்பு எண்கள் வெளியீடு

image

வட்ட அளவில் கீழ்க்கண்ட எண்களில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். வட்டாட்சியர் வேலூர் 9445000508,
வட்டாட்சியர் அணைக்கட்டு 9994615821, வட்டாட்சியர் காட்பாடி 9445000510, வட்டாட்சியர் கீ.வ.குப்பம் 9894333876 ,
வட்டாட்சியர் குடியாத்தம் 9445000509, வட்டாட்சியர் பேர்ணாம்பட்டு 9894751980 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ. 2 கோடி வருவாய்

image

வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து விடுமுறை நாட்களுக்காக 113 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் கடந்த 10ம் தேதி ரூ.57.54 லட்சமும், 11ம் தேதி ரூ.76.59 லட்சமும், 12ம் தேதி ரூ.61.29 லட்சமும், 13ம் தேதி ரூ.59.46 லட்சமும் என 4 நாட்களில் ரூ.2 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 15, 2024

வேலூர் மழை புகார்கள் தெரிவிக்க எண்கள் வெளியீடு

image

வேலூர் மாவட்ட பொதுமக்கள் மழை தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். தொலைப்பேசி எண் : 0416-2258016 கட்டணமில்லா தொலைப்பேசி எண்: 1077, வாட்ஸ்ஆப் எண் : 93840 56214 வட்டாட்சியர் பேரிடர் மேலாண்மை 9384056214, வேலூர் 94450 00508 அணைக்கட்டு 99946 15821, காட்பாடி 944500 0510, கே.வி.குப்பம்98943 33876, குடியாத்தம் 94450 00509, பேர்ணாம்பட்டு 98947 51980.

News October 15, 2024

வேலூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டரின் அறிவிப்பு

image

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் வேலூர் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரிரு இடங்களில் 14.10.2024 முதல் 17.10.2024 வரை மொத்தம் சுமார் 40 செ.மீ. மழையும் ஒரே நாளில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (அக்டோபர் 14) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 14) நடத்திய சோதனையில் 52 மது பாட்டில்கள், 1.250 கிராம் கஞ்சா, 1.150 கிராம் குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார் .

error: Content is protected !!