Vellore

News October 17, 2024

வேலூர் மாவட்ட கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

image

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய கவுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராகவும், அங்கு பணிபுரிந்த கோபி வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றிய சுதாகரன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட (100 நாள் வேலை) வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார்.

News October 17, 2024

போதை மாத்திரை விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்ற வழக்கில் கைதாகி, நீதிமன்ற காவலில் இருந்துவரும் அபிஷேக், விமல் ஆகிய இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பரிந்துரையின் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று  (அக் 16 ) இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க ஆணையை பிறப்பித்துள்ளார்.

News October 17, 2024

வேலூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 17) கன மழை பெய்யக்கூடும் என இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் மிதமானது முதல் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் வெளியே செல்லும் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 17, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் 61 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (அக்டோபர் 16) நடத்திய சோதனையில் 61 மது பாட்டில்கள், 1.340 கிராம் குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News October 16, 2024

வேலூர் மாவட்ட காவல் உதவி எண்கள் அறிவிப்பு 

image

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது தகவல் தெரிவிக்க நினைத்தாலோ கீழ்காணும் மாவட்ட காவல்துறை உதவி எண்களின் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார். மாவட்ட காவல் உதவி எண்கள்: 0416 2256802 9498181231.

News October 16, 2024

அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (16.10.2024) “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ராஜ்குமார், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

News October 16, 2024

வேலூர் மாமன்ற கூட்டம் – இனி அனுமதி இல்லை

image

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் நடைபெறும்போது பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பது வழக்கம். இதனால், மன்ற உறுப்பினர்களுக்கு சிரமமாக இருந்துள்ளது. எனவே இனி கூட்டம் தொடங்கும் முன் குறிப்பு எடுத்துகொள்ள அனுமதி வழங்கபடுமே தவிர, கூட்டம் நடைபெறும்போது பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

வேலூர் காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

சாலை விதிமுறைகளை பின்பற்றுவிர் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வீர்.
1.வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரிய செய்யவும்.
2.வாகனத்தின் வேகத்தினை குறைக்கவும்.
3.வாகனங்களுக்கிடையே இடைவெளி விட்டு செல்லவும்.
4.சாலையிலுள்ள வேகத்தடைகள் (ம) பள்ளங்களை கவனத்துடன் கடக்கவும்.
5.சாலையோற பாதசாரிகளை கவனித்து செல்லவும். என வேலூர் காவல் துறை செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

வேலூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், இன்று காலை10 மணி வரை தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி வரை வேலூரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியில் செல்லுவோர் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

error: Content is protected !!