Vellore

News March 27, 2025

வேலூர் போலிசார் ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் இரவு நேரங்களில் ரோந்து பணிக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விவரங்கள் சற்று முன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் இரவு நேரங்களில் வேலைக்கு செல்லும் அனைவரும் ஏதேனும் பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்.

News March 27, 2025

கூலி தொழிலாளி தவறி விழுந்து பலி

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சி வாணியம்பாடி பட்டி பகுதியில் இன்று ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பிரபாகரன் என்ற கூலி தொழிலாளி சுண்ணாம் அடித்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 27, 2025

பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

image

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 27, 2025

வேலூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது

image

வேலூர் மேட்டு இடையம்பட்டி பகுதியில் சூதாட்டம் நடப்பதாக வந்த தகவலின் பேரில்,பாகாயம் போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கார்த்தி (44), சுரேஷ் (42), ஜெகதீசன் (33), ஜெய் சங்கர் (54), ராஜி (50), ரவி (50), தினேஷ் குமார் (30), முத்து (46), நாராயணன் (50), சந்தோஷ் (29), பாபு (68), சத்தியமூர்த்தி (30), செல்வம் (43) ஆகிய 13 பேரை கைது செய்தனர். மேலும் ரூ.60 ஆயிரம், 5 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

News March 27, 2025

வேலூர் அருகே விபத்து; மரணம் 

image

குடியாத்தம் சூராளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (20). இவர் நேற்று அவரது பைக்கில் வீட்டிலிருந்து கடைக்குச் செல்வதற்காக சூராளூர் கூட்டு சாலையை கடந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ எதிர்பாராத விதமாக விஜய் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. படுகாயமடைந்த விஜய்யை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் உயிரிழந்தார்.

News March 27, 2025

கே.எம்.ஜி.கல்லூரி மாணவர்கள் போட்டியில் தேர்வு!

image

கே.எம்.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்ந்த சிவனேசன், நவீன் குமார், கோகுல் கிருஷ்ணன் & ஆதி ஆகிய மாணவர்கள் வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் , காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வலு தூக்கும் போட்டியில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்மாணவர்களை கல்லூரியின் தலைவர், செயலர் , முதல்வர் & உடற்கல்வி இயக்குனர்கள் ஆகியோர் பாராட்டினர்.

News March 26, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று மார்ச் 26 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்

News March 26, 2025

வேலூரில் மீண்டும் கடும் வெயில்: 101.5°F பதிவு

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 26) அதிகபட்சமாக 101.5°F வெயில் பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக குறைந்திருந்த வெப்பம் மீண்டும் அதிகரித்து, பகலில் அனல் காற்று வீசுகிறது. இது பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது. இந்த மாதத்தில் இது 5ஆவது முறையாக வெப்பம் 100°F கடந்துள்ளது.

News March 26, 2025

வேலூரில் கலை சங்கமம் திருவிழா துவக்கம்

image

வேலூர் மாவட்டம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டவுன் ஹாலில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சங்கமம் கலை திருவிழா நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 26) மாலை 6:00 மணி அளவில் துவக்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2025

வேலூரில் 10ம் வகுப்பு தேர்வு 18,089 பேர் எழுதுகின்றனர்

image

வேலூர் மாவட்டத்தில் (மார்ச் 28 ) தொடங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,984 மாணவர்கள், 9,105 மாணவிகள் மொத்தம் 18,089 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு எழுதுவதற்காக 103 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களை கண்காணிக்க 103 முதன்மை கண்காணிப்பாளர்கள், 103 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 120 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!