Tuticorin

News August 9, 2025

விநாயகர் சிலை கரைக்க வழிமுறைகள்-கலெக்டர்

image

தூத்துக்குடி, கலெக்டர் இளம்பகவத் அறிவிப்பின்படி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்கப்பட வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ், தெர்மாகோல் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. சிலைகளுக்கு உலர்ந்த மலர், வைக்கோல் ஆகியவற்றால் ஆபரணங்கள் தயாரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

தூத்துக்குடி: டிகிரி முடித்திருந்தால் ரூ.1,42,400 சம்பளம்….

image

தூத்துக்குடி மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு (Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். மத்திய அரசில் வேலை கிடைக்க அரிய வாய்ப்பு. டிகிரி முடித்தவர்களுக்கு பகிருங்கள்.

News August 9, 2025

தூத்துக்குடி: உதவித் தொகையுடன் தொழிற்பழகுநர் சேர்க்கை

image

தூத்துக்குடி, ஆக.11ல் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி, ITI, டிகிரி படித்த இளைஞர்கள் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். 200-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாத உதவித்தொகை ரூ.7,700 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும். விவரங்களுக்கு கோரம்பள்ளம் தொழிற்பயிற்சி நிலையத்தில் (0461-2340041) தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.

News August 9, 2025

மீளவிட்டானில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்த ஆடு மீட்பு

image

தூத்துக்குடி அருகே மீளவிட்டான்பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ளதரை மட்டநீர்த்தேக்க தொட்டியில் அதே பகுதி செல்வராஜ் என்பவரின் ஆடு தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. உடன் தகவலின் பேரில் வேலைக்கு நிலை அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தத்தளித்துக் கொண்டிருந்த ஆட்டை பத்திரமாக மீட்டு ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

News August 9, 2025

தூத்துக்குடி இரவு நேர காவல் துறை உதவி எண்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (08.08.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும், 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த எண்ணை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறது.

News August 8, 2025

தூத்துக்குடி: FIRST TIME வேலைக்கு போறீங்களா 15,000 CONFIRM!

image

தூத்துக்குடி இளைஞர்களே EPFO-வின் ஊழியர் வைப்பு நிதி சார்ந்த காப்பீடு (ELI) திட்டத்தின் கீழ், ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கபடுகிறது. முதல்முறையாக EPFOவில் பதிவுசெய்து, மாதத்திற்கு 1 லட்சத்திற்குள் சம்பாதிக்கும் புதிய ஊழியர்களுக்கு ரூ.15000 வழங்கப்படும். இரண்டு தவணைகளாக வழங்கபடுகிறது. மேலும் தகவல்களுக்கு தூத்துக்குடியில் உள்ள EPFO அலுவலகத்தை அனுகுங்க. இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News August 8, 2025

தூத்துக்குடி: இந்த தேதியை NOTE பண்ணிக்கோங்க!

image

தூத்துக்குடியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் போல, அவ்வப்போது மினி வேலைவாய்ப்பு முகாம்களும் நடைபெற்று வருகிறது. வரும் ஆக. 14ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10க்கு முகாம் தொடங்க உள்ளது. சுமார் 150 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். தொடர்பு – 9677734590. வேலை தேடும் இளைஞர்களுக்கு இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News August 8, 2025

தூத்துக்குடியில் சிவன் மீது சூரிய ஒளி விழும் அதிசய கோவில்

image

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ளது திருமூலநாதர் கோவில் எனப்படும் சிவன் கோவில். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவில் நவலிங்கபுர சிவ ஆலயங்களில் முதலாவது ஆலயமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் மார்ச் மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மூலவர் மீது சூரிய ஒளி படும் வகையில் கட்டப்பட்டுள்ளது பெரும் அதிசயமாகும். மனநலம் இதய நோய் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் பினி தீரும் என்பது ஐதீகம்.

News August 8, 2025

தூத்துக்குடி: ரேஷன் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு….

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 2025 மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை (ஆகஸ்ட்-9) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும். இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட குறைகளை பொதுமக்கள் சரிசெய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

தூத்துக்குடி பூசாரி கொலை: 17 வயது சிறுவன் கைது

image

தூத்துக்குடி, தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோட்டையன் தோப்பில், ஏ.சண்முகபுரத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ரவி நேற்றிரவு மர்ம நபர்களால் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, 17 வயது சிறாரை உடனடியாக கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!