India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றும் சாட்சிகளின் வாக்குமூலம், குறுக்கு விசாரணை நடைபெற்ற ஆவனங்களை மனுதாரர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகம் 2024 – 25 நிதியாண்டில் 4,70,352 டன் சமையல் எண்ணெய் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு 2023 இதே வேளையில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 581 டன்கள் மட்டுமே கையாண்டு இருந்தது. சமையல் எண்ணெய் கையாள்வதில் துறைமுகம் 14.28% வளர்ச்சி அடைந்துள்ளதாக துறைமுக செய்தி குறிப்பு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் நாளை(ஏப்.10) மகாவீரர் ஜெயந்தி அன்று ஒருநாள் மட்டும் மூட ஆணையிடப்படுகிறது. கடை பணியாளர்கள் அனைவரும் மதுபான கடை மற்றும் மதுகூடம் மூடியிருப்பதை உறுதி செய்து கடையை கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என தூத்துக்குடி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி சாஸ்தா கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் அன்று மக்கள் குலதெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம். இந்தாண்டு ஏப்.11 அன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்று அரசு அலுவலர்கள் விடுமுறை கோரும்பட்சத்தில் எவ்வித மறுப்பும் இன்றி அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். மேலும் அன்று தேர்வு இல்லாதா மாணவர்கள், ஆசிரியர்கள் விடுப்பு கேட்டால் வழங்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே மேககூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மது போதையில் தனது மைத்துனர் ரமேஷ் வீட்டிற்கு சென்று 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் வீட்டின் சொத்து பத்திரத்தை கேட்டு ரமேஷின் தாயாரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் கட்டையை எடுத்து வேல்முருகனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
தூத்துக்குடி பகுதியில் சேர்ந்த 9 மற்றும் 15 வயது சிறுமிகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மறவன் மடத்தை சேர்ந்த ஜெயராஜ், சூரிய ராஜ் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜோஸ்வா ராஜ் ஆகியோர் மீது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று ஜெயராஜ் மற்றும் சூரிய ராஜ்க்கு, 3 வருடம் சிறை தண்டனையும், ஜோஸ்வா ராஜ்க்கு 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளது. “தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம். ஒருவேளை இது சைபர் குற்றவாளிகள் உங்களுக்கு விரிக்கும் வலையாக இருக்கலாம்” என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் (அ) cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வந்த மருத்துவ உபகரணங்கள் பற்றிய தகவலை அடுத்து, அந்த நிறுவனத்தில் மருத்துவ உபகரணம் வாங்க ரூ.3 லட்சம் கட்டியுள்ளார். பின்னர் அது மோசடி என தெரிந்ததும் தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் புலனாய்வு செய்து அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கை முடக்கி பெண்ணிடம் ஏமாற்றப்பட்ட ரூ.3 லட்சத்தை மீட்டு இன்று ஒப்படைத்தனர்.
கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது, அந்த வகையில் நாளை (ஏப்ரல் 9) நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், பொதுமக்கள், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார் தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.