India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசின் கலை பண்பாட்டுத் துறை மூலம் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு நாட்டுப்புற கலைகள், செவிலியக் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா 8 மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. பங்கேற்க விரும்பும் தூத்துக்குடி கலைஞர்கள் மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT.
சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பஞ்சாயத்து, பெரியதாழை, உவரி உள்ளிட்ட பகுதிகளில் புதிய படத்தின் சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புக்காக அந்த பகுதிக்கு பிரபல குணசித்திர நடிகை தீபா வந்திருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தீபாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தீபா தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ள கிரேஸ் கல்வி குழுமம் கிரேஸ் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் காலேஜ் வைத்து தனியார் தொலைக்காட்சியின் சரிகமப சீசன் 5 காண நேர்முகத்தேர்வு வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திறமையாக பாடும் மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வாரம் தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (மார்ச்.19) குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் பொதுமக்கள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை புகாராக அளிக்கலாம் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தில் காசி விஸ்வநாதர்- விசாலாட்சி அம்பாள் கோவில் அமைந்துள்ளது.“காசிக்குச் செல்ல முடியாதவர்கள், இங்கு வந்தால் காசிப்புண்ணியம் கிடைக்கும். இங்கே, சாமிக்கு 16 வகை அபிஷேகம் செய்து வழிபட்டால், தடைகளும் தோஷங்களும் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூடும். அம்பாளுக்குச் செவ்வரளி மாலையும் சாற்றி, தாளம்பூ குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் “சங்கமம்-நம்ம ஊரு” திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலானத் தேர்வில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.*தேவைபடுவோருக்கு பகிரவும்*
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் ‘பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப்’ திட்டத்தின் கீழ் பதிவு செய்வதறகான அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே பதிவு செய்யாதவுர்கள் ‘பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப்’ திட்டத்தில் விரைந்து பதிவு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “பொதுமக்கள் நில அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு செல்லாமல் -1 என்ற இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணத்தையும் இந்த <
பிரதமரின் கௌரவ நிதி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற ‘அக்ரி ஸ்டேக்’ தளத்தில் பதிவு செய்வது கட்டாயம். இதன் வாயிலாக விவசாயிகளின் நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 31க்குள் பதிவு செய்வோருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 48,726 பேர் இதில் பயன்பெறும் நிலையில், தற்போது வரை 46% பேர்தான் பதிவு செய்துள்ளனர். தெரியாதவங்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.