India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று (12.03.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தொடர்பு எண்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி இனிப்பு கடைகளில் சங்கிலி தொடர்போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பட்டி மிட்டாய், சீனி மிட்டாய் தூத்துக்குடி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். சீனி கொண்டு தயாரிக்கும் மிட்டாய் வெள்ளை நிறத்தில் காணப்படும். கருப்பட்டி கொண்டு தயாரிக்கப்படும் மிட்டாய் கருப்பு நிறத்தில் காணப்படும். திருவிழாக்களில் இந்த மிட்டாய் கடைகள் கண்டிப்பாக இருக்கும்.*நண்பர்களுக்கு பகிர்ந்து நினைவு படுத்துங்கள்*
கோவில்பட்டியில் அரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள கோர்ட் சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வலியுறுத்தி பலமுறை போராட்டங்கள் நடத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நித்திரையில் இருக்கும் அரசு அதிகாரிகளை கண்டித்து சட்டமன்றம் முன்பு மார்ச் 19ஆம் தேதி அல்வா கொடுக்கும் நூதன போராட்டம் நடத்தப்போவதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து மார்ச் 14 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை கோரம்பள்ளத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் வேலை நாடுவோர் www.tnprivate jobs.in.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கேட்டுக்கொண்டுள்ளார். SHARE IT.
தூத்துக்குடி, குமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்றும்(மார்ச் 12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.SHARE IT.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று(மார்ச் 12) காலை 7 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். SHARE IT.
தூத்துக்குடி நெடுஞ்சாலை கோட்டத்திற்குட்பட்ட உட்கோட்டங்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் நடைமேடைகள், நடைபாதைகள், அனைத்து வகையான சாலைகளின் ஓரங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகத் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு மதுரை கூடுதல் முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தது. தொடர்ந்து நீதிபதி நாகலட்சுமி வழக்கை விசாரித்தார். தொடர்ந்து இந்த வழக்கு இம்மாதம் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாளை (12) தூத்துக்குடியில் வருகிறார். புதுக்கோட்டை அருகே உள்ள தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நாளை காலை வருகை தரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோழ மன்னனின் மகள் ஒருவர் குதிரை முகத்துடன் பிறந்திட மன்னர் சிவனை வேண்டி தவம் இருந்த போது சிவன் முறப்பநாட்டில் சென்று நீராட சொன்னார். மன்னன் மகளுடன் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் நீராட குதிரைமுகம் மனித முகமாக மாறியது. இந்த நதிக்கரையில் சோழ மன்னன் கட்டியது முறப்பநாடு கைலாசநாதர் கோவில் என்கிறது கோவில் வரலாறு. சிவபெருமான் குரு பகவானாக அமர்ந்திருப்பதுடன் நவகைலாயங்களில் 5 வது கைலாயம் போற்றப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.