Tuticorin

News April 16, 2025

தூத்துக்குடி மாவட்டத்தின் இராணுவ கிராமம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடி கிராமத்தினை ராணுவ கிராமம் என்று கூறுகின்றனர். வீட்டுக்கு ஒருவர் இங்கு இராணுவத்தில் பணிபுரிகிறார்கள், சுமார் 3500 பேர் ராணுவம், துணை ராணுவம், காவல் துறையில் பணிபுரிந்து வருகின்றனர். 3000க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இந்த கிராமத்தில் உள்ளனர். ராணுவத்தில் சேருவதற்காக இங்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. *ஷேர் பண்ணுங்க 

News April 16, 2025

தூத்துக்குடி பயணிகளுக்கு குட் நியூஸ்

image

அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தூத்துக்குடி பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறும் முறையை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை பயன்படுத்தி கியூஆர் கோடு ஸ்கேன் செய்தோ ஜிபே, போன்பே போன்ற பரிவர்த்தனை செய்தோ டிக்கெட் பெறலாம் என கூறியுள்ளனர். SHARE!

News April 16, 2025

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

News April 16, 2025

தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்பொழுதே வெளியிட்டுள்ளது.

News April 15, 2025

தூத்துக்குடி மாவட்டம் உருவானது பற்றி தெரியுமா?

image

தூத்துக்குடி மாவட்டம் 1986ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி உருவாக்கப்பட்டது. சிதம்பரனார் மாவட்டம் என்றழைக்கப்பட்டது.1997ம் ஆண்டு மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடியின் பெயரையே மாவட்டத்தின் பெயராகக் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் என பெயர் சூட்டப்பட்டது. 2008 ஆகஸ்ட் 5ம் தேதி தமிழகத்தில் 10வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் மேயராக கஸ்தூரி தங்கம் தமிழக முதல்வர் கருணாநிதியால் நியமிக்கப்பட்டார்.

News April 15, 2025

17-ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து மாதந்தோறும் சிறிய அளவில் தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை வேலை நாடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு  ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

News April 15, 2025

தூத்துக்குடியில் ஏப்.17ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 17.04.25 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாய பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சியர் இளம் பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

News April 15, 2025

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டப்பாறை, ஸ்ரீவைகுண்டம் என 8 இடங்களில் அரசு மானியத்துடன் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் பராமரிப்பு பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் சேர்ந்து பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று (ஏப்.15) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 15, 2025

தூத்துக்குடி ஏணி மிட்டாய் சுவை தெரியுமா உங்களுக்கு?

image

தூத்துக்குடி மாவட்டத்தில் திருவிழாவின் போது தோன்றும் ஆயத்த கடைகளில் வரிசையாக ஏணி போன்று அடிக்கி வைக்கப்பட்டிருக்கும் மிட்டாய் தான் ஏணி மிட்டாய். அரிசி உளுந்தை பக்குவம் ஆக்கி எண்ணெயில் போட்டு சங்கிலி போன்று பிழிந்து எடுத்து அதனை சீனி பாகில் அல்லது கருப்பட்டிப் பாகில் முக்கி எடுத்தால் அது ஏணி மிட்டாய். நாவில் வைத்தால் கரைந்து விடும். இந்த மிட்டாயை சிறுவர் முதல் பெரியவர் விரும்பி சாப்பிடுவர். Share.

News April 15, 2025

தூத்துக்குடியில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

image

தூத்துக்குடியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் கள தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் 20 பேர் நிரப்பப்பட உள்ளனர். இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-29 வயதிற்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!